குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஐதராபாத் (16 மார்ச் 2020): குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இன்று கூடிய தெலுங்கானா சட்டசபையில் சிஏஏ என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சட்டசபையில் பேசியபோது, சரியான ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். அதனால் மத்திய அரசு CAA குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் வலுவான செய்தி அளி்ப்போம் – தெலுங்கானா முதல்வர் அதிரடி!

ஐதராபாத் (08 மார்ச் 2020): நான் வீட்டில் பிறந்தவன். எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை. என் தந்தையின் சான்றிதழுக்கு நான் எங்கே செல்வேன்? என்று தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) ஆகியனவற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் கொந்தளித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திர சேகரராவ், “நான் கிராமத்தில் எனது வீட்டில் பிறந்தேன்….

மேலும்...

சிஏஏவுக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் தகவல்!

ஐதராபாத் (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க…

மேலும்...