மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை!

மும்பை (02 ஜூலை): மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் ஷிண்டேவை நீக்கம் செய்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். பாஜக ஆதரவுடன் புதிய மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கினார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக சிவசேனா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று, மகாராஷ்டிரத்தின் 20வது முதலமைச்சராக…

மேலும்...

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம் – உச்ச நீதிமன்றம் செல்லும் உத்தவ் தாக்கரே!

மும்பை (29 ஜூன் 2022): மகாராஷ்டிராவில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை கோரி சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை, இன்று மாலை நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 16 சிவசேனா எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்களை ஜூலை 11 வரை தகுதி நீக்கம்…

மேலும்...

மகாராஷ்டிராவில் சிவசேனா போராட்டம் நடத்த திட்டம்!

மும்பை (25 ஜூன் 2022): மகாராஷ்டிராவில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும்…

மேலும்...

இந்து முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் நிகழ்சிநிரல்: சிவசேனா தாக்கு!

மும்பை (12 ஏப் 2022): பாஜகவின் இந்துத்துவா, சுயநலம் மற்றும் வெற்று என்றும், பாஜகவின் இந்துத்துவவாதிகள்” நாட்டில் பிரிவினைக்கு முந்தைய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. பாஜகவுக்கும் இந்துத்துவாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் பாஜகவிடம் இல்லை என்றும் சிவசேனாவின் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மசூதிகளுக்கு வெளியே ‘ஹனுமான் பாடலை இசைப்பதன்…

மேலும்...

பாஜகவால் 25 ஆண்டுகள் வீணாகிவிட்டன – உத்தவ் தாக்கரே!

மும்பை (24 ஜன 2022): பாஜகவுடனான கடந்த 25 ஆண்டுகால கூட்டணி வீணாகிவிட்டதாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா முக்கிய பிரமுகர்களுடனான ஆன்லைன் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, பாஜக நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மையே அழிக்க முற்பட்டு விட்டது. அதனாலேயே அக்கட்சியை விட்டு விலகினோம் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்துத்துவா வலிமைக்காக பாஜகவுடன் சிவசேனா இணைந்தது. சிவசேனா ஒருபோதும் இந்துத்துவாவை அதிகாரத்திற்காக பயன்படுத்தியதில்லை. பாஜகவின் சந்தர்ப்பவாதம் இந்துத்துவாவை…

மேலும்...

திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பஜகவுக்கே சாதகம் – சிவசேனா!

புதுடெல்லி (10 ஜன 2022): கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது. “கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து நம்பிக்கையற்ற தலைவர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று சிவசேனாவின் முகப்புத்தகமான சாம்னாவில் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்காக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் செலவு செய்வதாகவும், அக்கட்சி செலவழித்த நிதி எங்கிருந்து வந்தது என்றும்…

மேலும்...

ஒன்றிய அமைச்சரை கைது செய்தது உத்தவ் தாக்கரே அரசு – மகாராஷ்டிராவில் பரபரப்பு!

மும்பை (24 ஆக 2021): ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்து மகாராஷ்டிரா அரசு பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெறும் ஆசிர்வாத் யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, சுதந்திர தின விழா உரையின்போது மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்துவிட்டதாகவும், தான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என தெரிவித்தார். இதற்கு சிவசேனா கொந்தளித்தது. மேலும் சிவசேனா உறுப்பினர்கள் அளித்த புகாரின்பேரில் மத்திய…

மேலும்...

பாஜகவின் இரட்டை வேடம் – சிவசேனா தாக்கு!

புதுடெல்லி (08 ஆக 2021): டெல்லியில் ஒன்பது வயது தலித் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது. தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி. கடந்த வாரம் அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அந்த சுடுகாட்டில்…

மேலும்...

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு ஆபத்து – என்ன சொல்கிறது சிவசேனா?

மும்பை (21 ஜூன் 2021): மஹாராஷ்ட்ராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சிவசேனா கட்சி கூட்டணி கட்சியான பாஜகவுடன் நட்பை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் சமீபத்தில் சிவசேனா கட்சி தலைவரும், மஹாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்ரே பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார், ஆனால் சிவசேனா பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்து ஆட்சியமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும்,…

மேலும்...

ராமர் கோவில் முக்கியமா? பெட்ரோல் முக்கியமா? – மத்திய அரசை சாடும் சிவசேனா!

மும்பை (23 பிப் 2021): பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சிவசேனா கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை காட்டி மத்திய அரசை விமர்சித்துள்ள சிவசேனா கட்சி ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதை காட்டிலும் அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய…

மேலும்...