முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!

சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது. சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக் – தொடரும் 8 வது நாள் போராட்டம் -வீடியோ

சென்னை (21 பிப் 2020): சென்னை ஷஹீன் பாக் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடியால் பலர்…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் நடைபெற்ற பேரணி – வீடியோ தொகுப்பு!

சென்னை (20 பிப் 2020): இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜமாத்துல் உலமா சபை தலைமையில் தமிழகமெங்கும் பிப்ரவரி 19 அன்று பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில்…

மேலும்...

இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள் – கருணாஸ்!

சென்னை (18 பிப் 2020): இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், என்று நடிகர் எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணரப் பேட்டை ஷஹீன் பாக் போராட்டத்தில் கருணாஸ் கலந்து கொண்டு பேசும்போது ‘ நான் அரசியல் வாதியாகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இங்கு வரவில்லை, ஒரு மனிதனாக உங்களுடன் நிற்கின்றேன் . இந்தியாவின் பன்முகத் தன்மை அடையாளத்தை அழிக்கும் சட்டத்தை எதிர்ப்பது நியாமான போராட்டம் என்றும், இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், வரலாறுகளை நீங்கள் மறைக்க முடியாது என்றும் கூறினார். நாளை…

மேலும்...

சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து தீவிரமடையும் சென்னை ஷஹீன் பாக் போராட்டம் – வீடியோ!

சென்னை(18 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டசபையில் சபாநாயகர் அறிவித்ததை அடுத்து சென்னை ஷஹீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை (சென்னை ஷஹீன் பாக்) தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என மத பேதமின்றி பலரும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்…

மேலும்...

இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான போராட்டம் அல்ல – சென்னை ஷஹீன் பாக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்!

சென்னை (17 பிப் 2020): நாட்டில் நடக்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான போராட்டம் அல்ல என்று மகாத்மா காந்தியின் பேரன் மகன் துசார் காந்தி தெரிவித்தார். சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக் களத்திற்கு வருகை புரிந்திருந்த துசார் காந்தி, போராட்டம் செய்யும் மக்களிடையே பேசும்போது, குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்திய மக்களின் ஒற்றுமையை எவ்வளவு நுட்பமாகப் பிரிக்கின்றனர் என்பதை பாருங்கள்? நாட்டில் நடந்து வரும் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைக்…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்கில் (வண்ணாரப்பேட்டை) நடந்த திருமணம் – வீடியோ

சென்னை(17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமண நிகழ்வில் மணமக்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். கையில் சி.ஏ.ஏவுக்கு எதிரான பதாகைகளுடன் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அனைவரது…

மேலும்...

சிஏஏவை எதிர்த்து சட்டமன்றம் முற்றுகை – தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

சென்னை (17 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் பிப்.19ஆம் தேதி…

மேலும்...

அன்று நமக்காக நின்றார்கள், இன்று அவர்களுக்காக நிற்போம்: சென்னை ஷஹீன்பாக்கில் இந்துக்கள்!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் காரர்களுக்கு உணவுகள் வழங்கி உதவி வருகின்றனர் அப்பகுதி இந்துக்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை ஷஹீன் பாக்காக மாற்றி பொதுமக்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில்…

மேலும்...

உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுவதா? – முதல்வருக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (17 பிப் 2020): வண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி குறித்த முதல்வரின் அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராகவும், சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் தன்னெழுச்சியாகப் போராடி வரும் மக்கள் மீது, அடக்குமுறையை கையாண்டு தடியடி நடத்தி வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதியான வழியில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற…

மேலும்...