ததஜ தலைமை அலுவலகம் சீல் வைக்க முயற்சி -பதற்றம்!
சென்னை(06/01/2021): தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை அலுவலகத்தை முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென சீல் வைக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை மண்ணடி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த அலுவலகத்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென சீல் வைப்பதற்காக தமிழக உள்துறை செயலகத்திலிருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இயக்கத்தின் தொண்டர்கள் உடனடியாக அலுவலகத்தின் முன் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்….