2 வருடங்களுக்குப் பிறகு டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மீண்டும் திறப்பு!

புதுடெல்லி (17 மார்ச் 2022): கோவிட் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டு மூடப்பட்ட டெல்லி , நிஜாமுதீன் மார்க்கஸ் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. கோவிட்-19 நெறிமுறைகளை மர்கஸ் வருபவர்கள் பின்பற்றுவதை மசூதி நிர்வாகம் உறுதி செய்யும் என்று கூறியதை அடுத்து , டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை மார்க்கஸின் மூன்று தளங்களை மீண்டும் திறக்க அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவில், மசூதி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் மார்ச் 18 ஆம் தேதி ஷப்-இ-பாரத்திற்கு ஒரு நாள்…

மேலும்...
Tabligh Jamath

தப்லீக் ஜமாஅத்-கொரோனா பரவல் வழக்கு:மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

புதுதில்லி (10 அக் 2020):நமது நாட்டில் அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒன்றாக பேச்சுச் சுதந்தரம் இருக்கலாம் என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் ஆரம்பித்த வேளையில, புதுதில்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டுடன் கொரோனாவை தொடர்புபடுத்தி ஊடகங்களில் அவதூறு செய்தி வெளியானது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தில்லியில் நடைபெற்ற மாநாட்டை கொரோனா பாதிப்புக்கான களம் என்று சித்தரித்து, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்…

மேலும்...
RSS

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா?

போபால் (25 ஜூலை 2020):தில்லியில் உள்ள நிஜாமுத்தின் மர்கஸ் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்த விஷயத்தை பாஜக ஊதி பெரிதாக்கியது. பாஜக வைச் சேர்ந்த பாப்தியா என்பவர் தப்லீக் ஜமாஅத்தினரை ‘அறிவற்ற பன்றிகள்’ என்ற தகாத வார்த்தைகள் மூலம் கேலிப்படுத்தினார். தற்போது மத்திய பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி ஜியா உல் ஹக் என்ற மாணவர் பாப்தியா பயன்படுத்திய அதே ‘பன்றிகள்’ என்ற…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மதுரை (16 ஜூன் 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா விசா மீறல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம். அவர்கள் அனுபவித்த தண்டனை காலமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமானது என கூறி அவர்களை அவரவர்கள் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், இந்தோனேசியா…

மேலும்...

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு!

புதுடெல்லி (14 ஜூன் 2020): இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் விரைவில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தங்கியிருந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது, விசா நடைமுறையை மீறியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது தனிமைப்படுத்தல் காலங்களும் முடிவடைந்தன. இந்நிலையில் வெளிநாட்டு ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு…

மேலும்...

பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த தப்லீக் ஜமாத்தினர் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு!

ஐதராபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த 38 தப்லீக் ஜமாத்தினர் பட்டியலை தெலுங்கானா அரசிடம் அசாதுத்தீன் உவைசி ஒப்படைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதித்து மீண்ட தப்லீக் ஜமாத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 38 தப்லீக் ஜமாத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்களைப் பற்றிய பட்டியல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதராபாத் எம்.பி.யும், AIMIM…

மேலும்...

முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக மருத்துவரின் வெறுப்பூட்டும் பேச்சு -அதிர்ச்சி வீடியோ!

கான்பூர் (01 ஜூன் 2020): முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள் வைரஸ் பரப்ப…

மேலும்...

டெல்லியிலிருந்து வந்த தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை!

திருநெல்வேலி (21 மே 2020): டெல்லியிலிருந்து தமிழகம் வந்த தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியான நிலையில் நெல்லையில் அவர்கள் சொந்த வீடுக:ளுக்குச் சென்றனர். தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாத்தினர் நாடுதழுவிய ஊரடங்கால் சொந்த மாநிலம் வரமுடியாமல் தவித்தனர். அவர்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை அடுத்து, தமிழக அரசின் முயற்சியில் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் நெல்லியில் நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்த தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்று இல்லை…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினரின் கைது இந்தியாவின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் – எஸ்டிபிஐ!

புதுடெல்லி (20 மே 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரின் கைது நடவடிக்கை உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திடீரென்று அறிவிக்கப்பட்ட தேசம் தழுவிய ஊரடங்கால், அயல்நாட்டு தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தம் தாய்நாட்டிற்கு திரும்பச் செல்லமுடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறார்கள் என்பது அறிந்ததே. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுரேஷ் சர்மா…

மேலும்...

தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப ரெயில் கட்டணம் செலுத்திய எம்பி ரவீந்திரநாத்துக்கு நன்றி: ஜவாஹிருல்லா!

சென்னை (18 மே 2020): டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப உதவிய எம்பி ரவீந்திரராத் உள்ளிட்ட அனைவருக்கும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: சுமார் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இன்று டெல்லியில் முழு முடக்கத்தில் பயணிக்க இயலாத நிலையில் இருந்த தமிழக தப்லீக் சகோதரர்களும் சகோதரிகளும் தமிழகம் திரும்பினர். நேற்று இரவு 11 மணியளவில் அவர்கள் தாம்பரம் ரயில்…

மேலும்...