டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் முழுமையாக மீண்டும் திறப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் உள்ள மசூதி வளாகம் முழுவதையும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யுமாறு டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸை மீண்டும் திறக்க வக்ஃப் வாரியத்தின் மனுவைக் கையாளும் நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி, உடனடியாக ஹஸ்ரத்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு – மாரிதாஸ் மீண்டும் கைது!

தேனி(16 டிச 2021): தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய வழக்கிலும் யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க, தப்லீக் ஜமாஅத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோவொன்று வெளியிட்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த வீடியோவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 04.04.2020 அன்று 292 A, 295 A, 505 ( 2), It act…

மேலும்...
Tabligh Jamath

தப்லீக் ஜமாத்தினர் மீதான விஷமத்தனமான மருத்துவ குறிப்பு எம்பிபிஎஸ் பாட புத்தகத்திலிருந்து நீக்கம்!

புதுடெல்லி (16 மார்ச் 2021): தப்லீ ஜமாத்தை கொரோனா பரப்பியவர்கள் என அவதூறு குறிப்பை எழுதிய மருத்துவ ஆசிரியர்கள் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் அந்த குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் பாடப்புத்தகத்தில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து விஷமதனமான குறிப்பு பதியப்பட்டிருந்தது. இந்த குறிப்புகளை அகற்றிய ஆசிரியர்களும் புத்தக வெளியீட்டாளர்களும்,  இதுபோன்ற குறிப்புகளை வெளியிட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டனர். விஷமக்கருத்து நீக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள்…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் மீது வீண்பழி – அரசு மற்றும் ஊடகங்கள் மீது மும்பை நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (23 ஆக 2020): கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அரசு பலிகடா ஆக்கியுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் (அவுரங்காபாத் பெஞ்ச்) நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில் மார்கஸ் தப்லீக்கில் கலந்து கொண்ட பல இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்தனர். டெல்லியில் மார்கஸில் கலந்து கொண்ட தப்லீக் வெளிநாட்டினரை பலிகடாக்களாக தேர்வு…

மேலும்...

தப்லீக் ஜமாத் மர்கஸில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை!

புதுடெல்லி (19 ஆக 2020): நாடெங்கும் தப்லீக் ஜமாத் மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, மும்பை, ஐதராபாத்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 20 மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத் மலப்பள்ளி ஹபீப் நகர் மற்றும் இத்ரே மில்லியா ஆகிய பகுதிகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மேலும்...

92 தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஜாமீன்-டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (16 ஜூலை 2020): விசா நடைமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட 92 இந்தோனேசிய தப்லீக் ஜமாத்தினருக்கு டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற கூட்டத்தில் , இந்தோனேசியாவை சேர்ந்த 92 தப்லீக் ஜமாத்தினரும் பங்கு பெற்றனர். இவர்கள் மீது விசா நடைமுறைகளை மீறியதாகவும், கொரோனா பரவிய நேரத்தில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மூன்று…

மேலும்...

ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி தமுமுக முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

சென்னை (11 ஜூலை 2020): வெளிநாட்டில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லிம்களை விடுவிக்க கோரி 14.7.2020 அன்று போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்களை தமிழக அரசு கைது செய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல்…

மேலும்...

நான் தலைமறைவாக இருந்தேனா? – மனம் திறந்த தப்லீக் ஜமாத் தலைமை இமாம்!

புதுடெல்லி (22 ஏப் 2020): தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி மறுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத் நடத்திய ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக அரசும் ஊடகங்களும் மாறி மாறி குற்றச்சட்டுகளை பதிவு செய்த நிலையில், தற்போது அந்த குற்றச் சாட்டுகள் பொய் என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பிறகு தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி முதன்…

மேலும்...

கொரோனா சர்ச்சை: தப்லீக் ஜமாஅத் பட்டியலில் முஸ்லிம் அல்லாதவர்கள் – திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (13 ஏப் 2020): கொரோனா தகிடுதத்தங்களில் தப்லீக் ஜமாஅத் பட்டியலில் 108 முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா பரவ தொடங்கியதும், அரசின் மெத்தனப் போக்கை மறக்கடிக்க தப்லீக் ஜமாஅத்தினர் மீது பழி போடத்தொடங்கியது. டெல்லி நிஜாமுத்தீன் தப்லீக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்ற பொய்யான…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து வந்த தகவல் பொய்யானது – துணை ஆணையர் விளக்கம்!

பெங்களூரு (07 ஏப் 2020): “தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து பாஜக எம்பி வெளியிட்ட தகவல் பொய்யானது.” என்று துணை ஆணையர் தெரிவித்துள்ளார். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு நாடெங்கும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். அதில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் அளிக்கப் பட்டு வருகின்றன. இதற்கிடையே தப்லீக் ஜமாஅத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நேற்று…

மேலும்...