மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா!

போபால் (20 மார்ச் 2020): மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்கள் 19 பேர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில கமல்நாத் தலைமையிலான அரசு ஆட்டம் கண்டது. இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முன்னதாக கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும்...