தேசிய சைக்கிள் சப்-ஜூனியர் போட்டியில் பங்கேற்க நாக்பூர் சென்ற வீராங்கனை நிடா பாத்திமா திடீர் மரணம்!

நாக்பூர் (24 டிச 2022): தேசிய போலோ சைக்கிள் சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்த கேரள அணி வீராங்கனை பத்து வயது நிடா பாத்திமா திடீரென உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிடா பாத்திமா அருந்திய உணவு விஷமாக மாறியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் நிடா பாத்திமாவின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம் எழுதியுள்ளார்….

மேலும்...

ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி – அதிர்ச்சியில் பாஜக!

நாக்பூர் (08 ஜன 2020): நாக்பூரில் பாஜக ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அடுத்த அதிர்ச்சியாக மாவட்ட அளவிலான தேர்தலில் (zilla parishad) காங்கிரஸ், கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜில்லா பரிசத் தேர்தலில், காங்கிரஸ் 31 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 11 மற்றும் சிவசேனா 1 இடத்தையும் கைபற்றியுள்ளது பாஜக 15 இடங்களை மட்டுமே கைபற்றியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையகமான நாக்பூரில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது பாஜக மற்றும் ஆர் எஸ். எஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...