புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கு கொரோனா பாதிப்பா?

புதுச்சேரி (28 ஜூலை 2020): புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி மற்றும் அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஜெயபால் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து 4 நாட்கள் பங்கேற்றிருந்தார். இதையடுத்து புதுச்சேரி தலைமைச் செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டது. இதன்பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடர் மரத்தடியில் நடைபெற்றது….

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – கேரள முதல்வர் சென்னை வருகை!

சென்னை (21 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பங்கேற்கிறார். நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை, கோவை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது….

மேலும்...