நோன்பு திறக்க சென்றவர்கள் மீது ரெயிலில் தீ வைத்து படுகொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கோழிக்கோடு (03 ஏப் 2023): கேரளா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில், மர்ம நபர் ஒருவர் ரெயிலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்….

மேலும்...

முஸ்லிமாக மாறிய பெண் படுகொலை!

பெங்களூரு (05 அக் 2022): கர்நாடகாவில் முஸ்லிமாக மாறிய இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் நாகாவி தாண்டா பகுதியைச் சேர்ந்த மீனாஸ் பெஃபாரி (35) என்பவர் சமீபத்தில் முஸ்லிமாக மாறினார். இந்நிலையில் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் இந்துத்வாவினர் சேதனா ஹுலகண்ணவர, ஸ்ரீனிவாச ஷிண்டே மற்றும் குமார் மரனாபசாரி ஆகியோர் அவரை கொலை செய்துள்ளனர். கடக் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த மீனாஸ் பேக்கரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அவர் வெட்டிக்…

மேலும்...

பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் 50 வயது முஸ்லீம் படுகொலை!

போபால் (05 ஜூலை 2022): மத்திய பிரதேசத்தில் பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் 50 வயது முஸ்லீம் படுகொலை செய்துள்ளனர். தி வயர் செய்தியின்படி, மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டம் பிரகாத் கிராமத்திற்கு அருகே ஆகஸ்ட் 2ஆம் தேதி, 50 வயது நசீர் அகமது – 40 வயதான சையத் முஷ்டாக் மற்றும் 38 வயதான ஷேக் லாலாவுடன் நள்ளிரவில் மாடுகளுடன் அமராவதி விலங்குகள் கண்காட்சிக்கு விற்பதற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பசு பாதுகாப்பு…

மேலும்...

பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் முஸ்லீம் வாலிபர் பலி!

மங்களுரு (22 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் பெல்லாரேயில் தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 18 வயது முஸ்லிம் இளைஞர் வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள மொக்ரல் புதூரில் வசிப்பவர் முஸ்லிம் வாலிபர் மசூத். இவர் கர்நாடக மாநிலம் சுள்ளியா, களஞ்சாவில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் மசூத் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார்….

மேலும்...

ராஜஸ்தான் கலவரத்தை தொடர்ந்து முஸ்லீம் முதியவர் படுகொலை!

அஜ்மீர் (10 ஏப் 2022): ராஜஸ்தான் கலவரத்தின் அடுத்த நாள் 55 வயது முஸ்லீம் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 3 அன்று, வன்முறையாக மாறிய பைக் பேரணியைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான 40 கடைகள் தாக்கப்பட்டன. கலவரத்தின் அடுத்த நாள் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவாரில் 55 வயது சலீம் என்ற முஸ்லீம் முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார், சம்பவ இடத்தில் இருந்த, சலீமின் பக்கத்து வீட்டுக்காரர் ஷாபாஸ் கூறுகையில், கொலை நடந்த…

மேலும்...

கேரளா சம்பவத்துக்கு மதச்சாயம் பூசுவதா? – பாஜக மீது காங்கிரஸ் பாய்ச்சல்!

திருவனந்தபுரம் (05 ஜூன் 2020): கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக மதச்சாயம் பூசுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வனப்பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளை வெடிகள் வைத்து கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இது சட்டவிரோதம் என்றாலும், அதனை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை….

மேலும்...

டெல்லி பெண் போலீஸ் படுகொலையில் திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லியில் பெண் போலீஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை சக அதிகாரியே கொலை செய்ததோடு அவரும் தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

மேலும்...

எஸ் ஐ வில்சன் படுகொலையில் தொடர்புடையதாக இன்னொருவர் கைது!

பெங்களூரு (18 ஜன 2020): எஸ் ஐ வில்சன் படுகொலை வழக்கில் தொடர்புடையதாக மெகபூப் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் ஐ வில்சன் படுகொலை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை…

மேலும்...