முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறாக பேசிய பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு!

பார்மர் (06 பிப் 2023): : ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் மத வெறுப்பு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக பதஞ்சலி நிறுவன உரிமையாளரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 அன்று துறவிகள் கூட்டத்தில் பாபா ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் பக்கம் திரும்புவதாகவும், இந்துப் பெண்களைக் கடத்துவதாகவும் ராம்தேவ் பேசியுள்ளார். மேலும் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கும் அதே வேளையில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்…

மேலும்...

மருந்து தரத்தை மீறியதால் கருப்புப் பட்டியலில் பாபா ராம்தேவின் பதாஞ்சலி தயாரிப்பு நிறுவனம்!

காத்மண்டு (21 டிச 2022): உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தித் தரத்தை மீறியதாகக் கூறி பாப ராம்தேவின் பதாஞ்சலி உட்பட 6 இந்திய மருந்து நிறுவனங்களை நேபாளம் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இத்தகவலை நேபாள அரசு டிசம்பர் 18ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு மூலம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை சப்ளை செய்யும் நேபாளத்தில் உள்ள உள்ளூர் முகவர்களை உடனடியாக ஆர்டர்களை திரும்பப் பெறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டுள்ளது….

மேலும்...

போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் – பாஜக எம்பி குற்றச்சாட்டு!

லக்னோ (01 டிச 2022): போலி நெய்களை விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது பாஜக எம்.பி. குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் பகுதியை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் என்பவர் பதஞ்சலி பிராண்டின் கீழ் ராம்தேவ் போலி நெய்யை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினார். ராம்தேவ் ‘கபாலா பதி’ யோகாவை தவறான வழியில் கற்றுத் தருவதாகவும் பாஜக எம்பி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பதஞ்சலியின் பெயரில் நடக்கும் சுரண்டலை…

மேலும்...

பெண்களுக்கு எதிரான கருத்துக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார்!

மும்பை (28 நவ 2022): : பெண்களை வெறுப்பதாக பேசியதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார். “பெண்கள் புடவை மற்றும் சல்வார்களில் அழகாக இருக்கிறார்கள். எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள் என்று பாபா ராம்தேவ் கூறியிருந்தார். இதற்கு சமூக வலைதளங்கள் உட்பட பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த கருத்துக்கு டெல்லி மகளிர் ஆணையமும், மகாராஷ்டிர மகளிர் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தன. 72 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராம்தேவுக்கு மகாராஷ்டிர மகளிர்…

மேலும்...

பெண்களின் அழகு குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து – ராம்தேவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு!

மும்பை (27 நவ 2022): ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று பாபா ராம் தேவ் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தானேவில் நடைபெற்ற யோகா முகாமில் பங்கேற்ற ராம்தேவ் அங்கு பங்கேற்றிருந்த பெண்களை பார்த்து பெண்கள் குறித்து கருத்து தெரிவித்தார் “பெண்கள் புடவை மற்றும் சல்வார்களில் அழகாக இருக்கிறார்கள், பெண்கள் எதிலும் அழகாக இருக்கிறார்கள்” என்று ராம்தேவ் தெரிவித்தார். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ் மற்றும் முதல்வர்…

மேலும்...

பாபா ராம்தேவின் நிறுவன தயாரிப்பு பொருட்களுக்கு வழங்கப்பட ஹலால் சான்றிதழ்!

புதுடெல்லி (31 மார்ச் 2022): ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலியின் ஆவணம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இது பதஞ்சலிக்கும் அதன் தயாரிப்புகளுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில், யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலிக்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் ‘ஹலால்’ (அனுமதிக்கப்பட்ட) சான்றிதழை வழங்கியுள்ளது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹிஜாப் தடை சர்ச்சை மற்றும் கர்நாடகாவில் கோயில் வளாகங்களில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…

மேலும்...

மருத்துவத்துறைக்கு எதிராக பாபா ராமதேவ் மீண்டும் திமிர் பேச்சு!

புதுடெல்லி (26 மே 2021): இந்திய மருத்துவர் சங்கத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது; அலோபதி மருந்துகளால்தான் பல லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 10,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்தனர் என யோகா குரு என தம்மை அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் பேசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மத்திய அரசு தலையிட்டும் பிரச்னை…

மேலும்...

பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வின் அடிப்படையில் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் ஒருபுறம் கொரோனாவுக்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இது இப்படியிருக்க யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது….

மேலும்...

நடிகை தீபிகா படுகோனுக்கு பாபா ராம்தேவ் அட்வைஸ்!

புதுடெல்லி (17 ஜன 2020): “என்னிடம் நடிகை தீபிகா படுகோன் ஆலோசனை பெற்றால் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள்மீது இரவு நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தீபிகா படுகோனுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வரும்…

மேலும்...