காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று காஷ்மீர் திரும்பியது. இன்றைய பயணம் பனிஹாலில் இருந்து அனந்த்நாக் வரை திட்டமிடப்பட்டது. ஆனால் பயணம் தொடங்கி பத்து கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பு காரணங்களை கூறி பயணம் அவசரமாக நிறுத்தப்பட்டது. உமர் அப்துல்லா இன்று இருவருடனும் இருந்தார். பாதுகாப்பு பிரச்னைகள் இருந்தால், பயணத்தை…

மேலும்...

ஆர் எஸ் எஸ் அலுவலகம் செல்ல, என் தலை வெட்டப்பட வேண்டும் -ராகுல் காந்தி!

புதுடெல்லி (17 ஜன 2023): காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்துள்ள ராகுல் காந்தி, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது….

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரைக்கு தடையா?

புதுடெல்லி (21 டிச 2022): உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் பாரத் ஜோடோ யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒன்றிய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மரபணு வரிசைமுறையை அதிகரிக்கவும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை…

மேலும்...

கிறிஸ்துமஸ் தினத்தன்று ராகுல் காந்தியுடன் இணையும் கமல் ஹாசன்!

சென்னை (19 டிச 2022): கிறிஸ்துமஸ் தினத்தன்று பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார் கமல்ஹாசன். இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், “ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தேசிய தலைநகரில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் எம்என்எம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்தார். ஏற்கனவே பாரத் ஜோடோ யாத்ராவில் ஸ்வரா பாஸ்கர் உட்பட…

மேலும்...

100 வது நாளை எட்டியுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை!

ஜெய்பூர் (16 டிச 2022): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை 100வது நாளை எட்டியுள்ளது. இன்று ராஜஸ்தானில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ரா பயணத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்போம் என்ற முழக்கத்தை ராகுல் காந்தியின் நடைப்பயணம் எழுப்பி வருகிறது. ஏழு மாநிலங்களுக்குப் பிறகு, எட்டாவது மாநிலமான ராஜஸ்தானில் யாத்திரை பயணம் தொடர்கிறது. 2798 கி.மீ. தூரம் கொன்ட இந்த பயணம் ஜனவரி 26ம் தேதி ஸ்ரீநகரில்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

போபால் (04 டிச 2022): மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் கன்யாசாவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராஜேஷ் கண்ணோஜே பள்ளி அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 25 ஆம் தேதி, யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தை அடைந்தபோது, ​​​​ஆசிரியர் யாத்திரையில் பங்கேற்றார். ஆசிரியர் பள்ளி விடுமுறையில் யாத்திரையில் கலந்து கொண்டார். அவர் பேரணியில் பங்கேற்ற புகைப்படங்களையும் தனது…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

இந்தூர் (19 நவ 2022): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மத்திய மற்றும் மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தின் ஆதாரம் குறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் வந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. ஒரு இனிப்பு கடையில் தபால் மூலம் கிடைத்த…

மேலும்...

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை விளம்பரத்தில் சாவர்க்கர் படம்!

மாண்டியா (06 அக் 2022): காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கரின் படம் மீண்டும் இடம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மாண்டியாவில் அமைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டில் சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டது. சாந்திநகர் எம்.எல்.ஏ என்.ஏ.ஹாரிஸ் பெயரில் ஃப்ளக்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் தாங்கள் ஒட்டவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார். சாவர்க்கருடன், ராகுல்…

மேலும்...

முஸ்லிம் சிறுமியுடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக விஷமப்பிரச்சாரம்!

புதுடெல்லி (21 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையின் போது பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்திருந்த சிறுமியின் கையை பிடித்தபடி ராகுல் காந்தி நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்து பாஜகவின் வகுப்புவாத பிரசாரம். செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (15 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையை அடுத்து இன்னொரு யாத்திரையை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யும் புதிய யாத்திரையை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், பாரத்…

மேலும்...