பிரசாந்த் பூஷணுக்கு செம தண்டனை!

புதுடெல்லி (31 ஆக 2020): கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிரசாநத் பூஷணுக்கு ஒரு ரூபாய் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு கடந்த ஜூன் மாதம் ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று டுவிட்டரில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார். மேலும் நீதித்துறையின் செயல்பாடுகள் கடந்த 6 வருடங்களாக…

மேலும்...

என் மனசாட்சிக்கு துரோகம் செய்ய முடியாது – பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்!

புதுடெல்லி (24 ஆக 2020): மன்னிப்பு கேட்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷணின் ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று 14ம் தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஆனால், உடனடியாக அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. அவருக்கு தண்டனை அறிவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதங்களின்போது அவர்…

மேலும்...
Supreme court of India

நீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது – உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

புதுடெல்லி (21 ஆக 2020): பேச்சுரிமை, கருத்துரிமைகள் மறுக்கப்படடுகின்றன. என்று பிரஷாந்த் பூஷன் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து…

மேலும்...