திமுக எம்பியின் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கம்!

சென்னை (17 அக் 2020): திமுக எம்பி கவுதமசிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கவுதமசிகாமணி முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

ஆசை பட்டவர்களுக்கு பதவியில்லை – அதிருப்தியில் உடன்பிறப்புக்கள்!

திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டதால் திமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்குப் பதிலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்றவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், மதுரை மூர்த்தி உட்பட…

மேலும்...