தொற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!

பாலஸ்தீன் (27 நவம்பர் 2023): கடந்த 50 நாட்களாக நிலவும் போர்ச் சூழலில், இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் அடியோடு நிலைகுலைந்து போயுள்ளது காஸா நகரம்.  இந்த போர்ச்சூழல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நான்கு நாட்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. போர் பதட்டத்தின் காரணமாக காஸாவில் வசிக்கும் 17 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான உயிர் இழப்புகளால், பிணங்களை ஒரே புதைகுழியில் அடக்கம் செய்து வருகின்றனர். இச்சூழலில், காஸா…

மேலும்...

பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

பாலஸ்தீன் (22 நவம்பர் 2023): பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 50 நாட்களாக காஸா- பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலின் குண்டு மழையை நிறுத்தி பாலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வரும் கத்தார், இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு காஸா பகுதியில் முழுமையாக போர் நிறுத்தப் படுகிறது. தரை வழியாகவோ, வான்…

மேலும்...

மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் பொய் புகார்!

பாலஸ்தீன்(08 நவம்பர், 2023): பாலஸ்தீனில் உள்ள “ஷேக் ஹமத் பின் கலீஃபா” மருத்துவனைக் கட்டடத்தின் கீழ் பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது என இஸ்ரேல் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதனால், சமீபத்தில் இம் மருத்துவமனையும் இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளானது. பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் காரணமாக, பாலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஐநா மையங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இன்று வரை பாலஸ்தீனில் 10,600 பொதுமக்கள்…

மேலும்...

உக்ரைன் மீதான போர் ஒரு குற்றச்செயல் – ரஷ்ய விமானி!

மாஸ்கோ (14 மார்ச் 2022): ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், விமான பயணத்தின்போது “உக்ரைன் மீதான போர் குற்றச்செயல்” என்று பயணிகளிடம் விமானி ஒருவர் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை கண்டிக்கும் விமான ஒரு ரஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பகைமையை உடனடியாக நிறுத்துமாறு விமானி அழைப்பு விடுப்பதாக வீடியோவில் உள்ளது. ‘: “உக்ரைனில் நடப்பது போர் ஒரு குற்றம். விவேகமுள்ள குடிமக்கள் என்னுடன் உடன்படுவார்கள் என்று நான்…

மேலும்...

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் அறிவிப்பு!

மாஸ்கோ (05 மார்ச் 2022): உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா 10வது நாளாக (மார்ச்.5 ) போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா இன்று காலை 11;30 மணி முதல் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் துறைமுக நகரமான மரியுபோல் உட்பட மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் வசிப்பவர்கள் வெளியேற உதவும் வகையில் இந்த போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அதேவேளை இந்த போர்…

மேலும்...

உக்ரைன், ரஷ்யா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

மாஸ்கோ (02 மார்ச் 2022): ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைனும் அதற்கு சம்மதித்தது. இரு தரப்பிற்கும் இடையே…

மேலும்...

உக்ரைன் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமா?

மாஸ்கோ(28 பிப் 2022): அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரம் குறித்து உக்ரைன் அதிபர், இங்கிலாந்து அதிபரிடம் பேசியிருப்பது பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படைகளின் தாக்குதல் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 14 குழந்தைகள் உட்பட 352 பேர்…

மேலும்...

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள்!

புதுடெல்லி (28 பிப் 2022): உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 7 விமானங்களை இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்த இந்தியர்கள், அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சென்று அடைக்கலமாகி உள்ளனர். அவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நான்கு ஏர் இந்தியா விமானங்கள், ஒரு இண்டிகோ விமானம்…

மேலும்...

ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – ஒப்புக்கொண்ட ரஷ்யா!

மாஸ்கோ (28 பிப் 2022): உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷ்யா…

மேலும்...

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க 27 நாடுகள் ஒப்புதல்!

பாரிஸ்(26 பிப் 2022): உக்ரைனுக்கு 27 நாடுகள் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. ரஷ்யா, உக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றன. இந்தசூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தீவிரபடுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தையும், மெலிடோபோல் நகரையும் கைப்பற்றியுள்ளதாக…

மேலும்...