வாசம் பிடித்த வாசன் – மோசம் போன தேமுதிக!

சென்னை (09 மார்ச் 2020): மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஜி.கே.வாசன் அறிவிக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு மேல்சபை எம்.பி. பதவிக்கான வாய்ப்பை வழங்கி இன்று அ.தி.மு.க. சார்பில் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தே.மு.தி.க.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தே.மு.தி.க., மேல்சபை எம்.பி. பதவியை கேட்டிருந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த போதே அதற்கு உறுதியும் அளிக்கப்பட்டு இருந்தது. அனால் அ.தி.மு.க. தலைமை திடீரென இவ்வாறு…

மேலும்...

மாநிலங்களவை தேர்தல் – போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை (09 மார்ச் 2020): நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும், அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 26.3.2020 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை…

மேலும்...