4 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி வீண் – அமைச்சர் தகவல்!

சென்னை (18 ஜூலை 2021): “அதிமுக ஆட்சியில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 டோஸ் தடுப்பூசிகள் வீணாக்கப் பட்டுள்ளன!” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மீனம்பாக்கத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 32 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். திமுக அரசு பதவியேற்ற பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 61 ஆயிரத்து 297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு…

மேலும்...

அமைச்சரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட எல் முருகன்!

சென்னை (06 ஜூலை 2021): தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக கேட்ட எல் முருகனுக்கு வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பிரதமர் மோடியை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எல்,முருகன், “தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக கோரிக்கை வைத்தோம். அதற்கு பிரதமர், தடுப்பூசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் முன்கூட்டியே தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்துத் தரவுகளும்…

மேலும்...

ஆர்எஸ்எஸ் குறித்து சொன்னது என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்!

சென்னை (20 ஜூன் 2021:ஆர்.எஸ்.எஸ். குறித்து கூறியது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? – சுகாதரத்துறை அமைச்சர் பதில்!

சென்னை (11 ஜுன் 2021):  சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? என்ற ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக  சுகாதரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்,விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாகவே ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படும் என்ற செய்திகள் திடீரென கிளம்பின.. எனவே, நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஓபிஎஸ் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்..அதில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றும் முடிவை முதலமைச்சர்கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்…

மேலும்...