மாரத்தான் போட்டியில் அசத்திய முதியவர் ஷஹாபுத்தீன்!

அதிராம்பட்டினர்ம் (31 டிச 2022): தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றனர். இந்நிலையில் இதில் குறிப்பாக 65 வயது முதியவர் வழக்கறிஞர் ஷிஹாபுத்தீன் கலந்துகொண்டு முழுமையாக ஓடி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இறுதிவரை ஓடியும் அவர் முகத்தில் களைப்பைக் காட்டிக் கொள்ளவே இல்லை. இவர் மறைந்த முன்னாள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ…

மேலும்...

பசியை போக்க நாணயங்களை சாப்பிட்ட முதியவர்!

பெங்களூரு (28 நவ 2022): பசியை போக்க நாணயங்களை விழுங்கிய 58 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 187 காசுகள் எடுக்கப்பட்டன. கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள லிங்கசுகூரில் 58 வயது முதியவர் பசியால் நாணயங்களை விழுங்கியுள்ளார். இந்நிலையில் அவரது வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள நாணயங்களை மருத்துவர்கள் மீட்டுள்ளனர். ஸ்ரீகுமாரேஷ்வர் மருத்துவமனை டாக்டர்களால் அறுவை சிகிச்சையின் மூலம் முதியவரின் வயிற்றிலிருந்து காசுகளை மீட்டுள்ளனர். எப்போது பசியுடன் இருக்கும் அவர், ஒரு ரூபாய் முதல் ஐந்து…

மேலும்...

கட்டிப்பிடித்த இளம்பெண் – முதியவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

மும்பை (07 அக் 2022): முதியவர்களை கட்டிப்பிடித்து செல்போன்கள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிய இளம் பெண் கீதா படேல் என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையில் 72 வயதான முதியவர் ஷாப்பிங் முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது. கீதா ஆட்டோவை நிறுத்திவிட்டு லிப்ட் கேட்டாள். பின்னர் அந்த இளம் பெண் ஆட்டோவை ஒரு கட்டிடத்தின் முன் நிறுத்தச் சொல்லி முதியவரைக் கட்டித் தழுவி நன்றி செலுத்தினார். முதியவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது…

மேலும்...

உதவி செய்வதாகக் கூறி கடத்திச்சென்று முஸ்லீம் வயோதிகர் மீது கொடூர தாக்குதல்!

காஜியாபாத் (14 ஜூன் 2021): உத்திர பிரதேசத்தில் மசூதிக்கு சென்ற முஸ்லீம் வயோதிகரை மசூதிக்கு அழைத்து செல்வதாகக் கூறி இந்து இளைஞர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் அப்துல் சமத் சைஃபி என்ற வயோதிகர் தொழுகைக்காக மசூதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் மசூதிக்கு அழைத்து செல்வதாகக் கூறிய கடத்தப்பட்டதாகவும், அருகிலுள்ள வனப்பகுதியில் உள்ள ஒரு குடிசைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது, அங்கு இருந்த ஒரு குழு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘வந்தே மாதரம்’…

மேலும்...

போலீஸ் வன்முறையால் 83 வயது முதியவர் படுகாயம் – கண்பார்வை இழப்பு!

சேலம் (18 ஆக 2020): சேலத்தில், விசாரணை என்ற பெயரில் லட்டியால் கண்மூடித்தனமாக தாக்கியதில், 83 வயது முதியவரின் கை முறிந்துள்ளது மேலும் அவருடைய மகனுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது,. சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி…

மேலும்...

காசு இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை – தனியார் மருத்துவமனையின் அத்துமீறல்!

போபால் (08 ஜூன் 2020): கையில் பணம் குறைவாக இருந்ததால் சிகிச்சைக்கு வந்த முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷாஜாபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் அவரது குடும்பம் பணம் செலுத்தியது ஆனால் டிஸ்சார்ஜ் ஆகும் போது மருத்துவமனை சார்பில் ரூ.11,270 கூடுதலாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முதியவரின் குடும்பம்…

மேலும்...

5 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த 50 வயது முதியவர் கைது!

கோவை (09 பிப் 2020): ஐந்து வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் காமராஜபுரத்தில் உள்ள ஒரு மர குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். அதே குடோனில் ஒரு தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (08/02/2020) அந்த தம்பதியினர் தங்களின் 5 வயது சிறுமியுடன் வேலைக்கு வந்துள்ளனர். பின்பு சிறுமியை தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு…

மேலும்...