பன்மடங்கு ஊதிய உயர்வு தரும் சவூதி - பணியாளர்கள் மகிழ்ச்சி!

சவூதியில் பன்மடங்கு உயர்கிறது ஊதியம் – பணியாளர்கள் மகிழ்ச்சி!

ரியாத் (21 பிப்ரவரி 2024): சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பன்மடங்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என சவூதியில் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி எண்ணெயை நம்பியிருக்கும் நாடு ஆகும். சமீப காலமாக எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பி இராமல் சுற்றுலா, தொழில்துறை மேம்பாடு, உள்நாட்டு தயாரிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை சவூதியில் அதிகரித்துள்ளது….

மேலும்...
ஹைடெக் ஸ்டேடியம்

அதிசய வைக்கும் சவூதியின் ஹைடெக் ஸ்டேடியம்!

ரியாத், சவூதி (16 ஜனவரி 2024): ரியாத் அருகே 200 மீட்டர் உயரமுள்ள குன்றின்மீது ஹைடெக் ஸ்டேடியம் அமைக்கிறது சவூதி அரசு. இந்த விளையாட்டு அரங்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வடிவமைப்பை சவுதி அரேபியா அரசு நேற்று திங்கள்கிழமை வெளியிட்டது. சவூதி அரேபியா நாட்டில் எதிர்வரும் 2034 ஆண்டு உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டு நடைபெற உள்ளது. இதனைக் காண வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு பிராஜக்ட்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஹைடெக்…

மேலும்...

இஸ்ரேலிடம் பேசிப் பயனில்லை; இனி அதிரடி நடவடிக்கை! – கத்தார் மன்னர் அறிவிப்பு

ரியாத் – சவூதி அரேபியா (12 நவம்பர் 2023): ரியாத்தில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாடு (Joint Arab-Islamic Extraordinary Summit) நேற்று நடைபெற்றது. இந்த அவசர கால உச்சிமாநாட்டில் அனைத்து அரபு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தார் நாட்டின் மன்னரான ஷேக் தமீம் பின் ஹாமத் அல்-தானி ஆற்றிய உரை, போர்க்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத்தாரின்…

மேலும்...

மழை பொழிவுக்குக் காரணமான மற்றுமொருவர்!

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை அழைக்க ஒரு குழு அப்பள்ளிக்குச் சென்றிருந்தது. அச்சமயம் பள்ளி முதல்வர் தெரிவித்த செய்தி, நம் குழுவினரைக் கலங்கடித்துள்ளது. அதாவது மேல்நிலை (+2) படிக்கும் ஒரு மாணவனின் தந்தை அண்மையில் எதிர்பாரா விதமாக ரியாத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில்…

மேலும்...

ரியாத் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம்!

ரியாத் (20 ஜன 2023): ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது டெர்மினல்கள் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் அப்துல்அசிஸ் அல்துஅய்லிஜ் தெரிவித்துள்ளார். ரியாத் விமான நிலையத்தில் டெர்மினல்கள் 3 மற்றும் 4 அவ்வப்போது நெருக்கடி ஏற்படுவதால், இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு இந்த மேம்பாட்டுத் திட்டம் உதவும். ரியாத் விமான நிலையத்தில் 1, 2 மற்றும் 5 ஆகிய டெர்மினல்கள்…

மேலும்...

சவூதி அரேபியா ரியாத்தில் நடந்த மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி!

ரியாத் (04 ஜன 2023): கடந்த 29 டிசம்பர் 2022 மாலை ரியாத் பத்ஹா ஜாமியா ஷம்ஸிய்யா பள்ளிவாசலில் மாணவர்களுக்கான விநாடி வினா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மெளலவி நூஹ் அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 35க்கும் அதிகமான மாணவர்கள் 7 முதல் 14 வயது வரை கலந்துகொண்டு ஆர்வமாகக் கலந்துகொண்டனர். மெளலவி அபுல்ஹசன், இக்பால் காசிம், ஷேக் அப்துல்லா, நிசார் அஹ்மது, பாபா அஸ்ஸாம், தன்வீர், AK உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பீகாரைச் சேர்ந்த…

மேலும்...

சவூதி அரேபியா ரியாத்தில் ஆடல் பாடலுடன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

ரியாத் (02 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத் நகரில் ஆடல், பாடல் மற்றும் வான வேடிக்கைகளின் வண்ணமயமான காட்சிகளுடன் ரியாத் நகரம் புத்தாண்டை வரவேற்றது. ரியாத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் புத்தாண்டுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். அரபு உலகின் முன்னணி பாடகர்களை ஒன்றிணைத்து, ரியாத் பவுல்வர்டில் நடைபெற்ற “ட்ரையோ நைட்” இசை நிகழ்ச்சியின் போது புத்தாண்டு கொண்டாடப் பட்டது.  இது சவூதி அரேபியாவின் மிக முக்கியமான புத்தாண்டு நிகழ்வாகவும் இருந்தது. ஜார்ஜ்…

மேலும்...

அம்பேத்கரை அடையாளப்படுத்தியது முஸ்லிம்லீக் தான் : முன்னாள் எம்.பி பேச்சு!

ரியாத் (17 டிச 2022): காயிதே மில்லத் பேரவை ரியாத் சார்பாக சந்திப்போம் சங்கமிப்போம் என்கிற நிகழ்ச்சி க்ளாஸிக் அரங்கில் வெள்ளிக்கிழமை (16 டிசம்பர் 2022) நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினர் M. அப்துல்ரஹ்மான் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வுக்கு பேரவையின் தலைவர் சுலைமான் ஃபைஜி தலைமை தாங்க, பொதுச்செயலாளர் லால்பேட்டை நாஸர் தொகுத்து வழங்கினார். “கலிமா” ஷாகுல்ஹமீது; கேஎம்சிசி முஸ்தஃபா, இந்தியன் வெல்பேர் ஃபாரம் ஜாகிர், சவூதி திமுக மருத்துவர் சந்தோஷ் ஆகியோர்…

மேலும்...

ரியாத்தில் நடந்த ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆண்டுவிழா!

ரியாத் (29 பிப் 2020): திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி தமிழகத்தின் பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலகளாவிய அளவில் முன்னாள் மாணவர் சங்கங்களை நடத்தி வருகின்றனர். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ரியாத் பிரிவு கடந்த 20 பிப்ரவரி 2020 அன்று ரியாத்தின் நூஃபா அரங்கில் தனது ஆண்டுவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. ஜமாலியன் ரியாத் தலைவர் ஜியாவுதீன் தலைமை தாங்க, முன்னிலையாக துணைத் தலைவர் மாலிக் இப்ராஹிம், செயலாளர்…

மேலும்...