கொரோனா தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்த நாட்டுக்கே ஆபத்து!

மாஸ்கோ (04 ஜூலை 2021): உலகில் கொரோனா தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்த நாடு ரஷ்யா. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி ‘ஸ்புட்னிக்’ பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடுகிறது. இன்று மட்டும் 25,142 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச பாதிப்பு மேலும் ஒரே நாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்…

மேலும்...