வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது குறித்து சட்ட அமைச்சர் பதில்!

புதுடெல்லி (18 டிச 2022): ஆதார் அட்டை தற்போது நாட்டின் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. பள்ளி சேர்க்கை முதல் வங்கி வரை அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை கட்டாயம். பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இணைக்கப்படவில்லை என்றால் பான் கார்டு ரத்து செய்யப்படும். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்குமாறு குடிமக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் வசதியை தேர்தல் ஆணைய இணையதளம் வழங்கியுள்ளது….

மேலும்...

சிரமத்தை தவிற்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதளம்!

சென்னை (04 டிச 2022): மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் நுகர்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மின்நுகர்வோர் அனைவரும் ஒரே சமயத்தில் மின்வாரிய இணையதளத்தில் மின் இணைப்புடன், ஆதாரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. அத்துடன், மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை…

மேலும்...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் – செந்தில் பாலாஜி!

சென்னை (27 நவ 2022): மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஏதுவாக நாளை மறுநாள் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தமிழகத்தில் உள்ள அனைத்து மின் அலுவலங்களிலும் நாளை மறுநாள் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என கூறியுள்ளார். பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து…

மேலும்...

ஆதார் அட்டை பெற்று பத்தாண்டுகள் முடிவடைந்தால் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் – மத்திய அரசு!

புதுடெல்லி (10 நவ 2022): ஆதார் வழங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்தால் ஆதாரை உரிய ஆவணங்களை ஆதாரை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அடையாள மற்றும் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஆதாரின் துல்லியத்தை உறுதி செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும். ஆதார் அட்டையைப் பெற்று 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். துணை ஆவணங்கள் அடையாளச்…

மேலும்...

10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க பரிந்துரை!

புதுடெல்லி (12 அக் 2022): 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் புதுப்பிப்பை ஆன்லைனிலும், ஆதார் மையங்களிலும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. https://myaadhaar.uidai.gov.in என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம். இது தவிர ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் அப்டேட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த…

மேலும்...

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முறை!

புதுடெல்லி (19 டிச 2021): வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே நபர் வெவ்வேறு தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைத் தடுக்க இந்த நடைமுறை உதவும் என சொல்லப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் சேவையகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு என மூன்று விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை…

மேலும்...

ஆதார் மூலம் தொலைபேசி எண்னை எடுத்து வாக்காளர்களிடம் முறைகேடு செய்யும் பாஜக!

புதுச்சேரி (25 மார்ச் 2021): ஆதார் மூலம் தொலைபேசி எண்னை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நிதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுக்கள்’…

மேலும்...