மாநிலங்களவை தேர்தல் – போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை (09 மார்ச் 2020): நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும், அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 26.3.2020 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை…

மேலும்...

அதிமுக விழாவில் மத்திய அமைச்சருக்கு கிடைத்த அவமானம்!

விருதுநகர் (06 மார்ச் 2020): புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை அதிமுக பிரமுகர்கள் அவமானப் படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு தமிழக அமைச்சர்களும், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனும் கலந்து கொண்டார். விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது அவரது…

மேலும்...

கரூரில் கலகலப்பு – எடப்பாடியை வரவேற்ற திமுக -VIDEO

கரூர் (06 மார்ச் 2020): தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கரூரில் வரவேற்க அதிமுக கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் திமுக கொடியும் இடையே பறந்து கலகலப்பூட்டியது. தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கரூருக்கு வியாழன் அன்று வந்தார். கரூர் அடுத்த காந்திகிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 ஆம் தேதி அன்று தமிழக…

மேலும்...

எம்பி பதவி தரவில்லையேல் தக்க பாடம் புகட்டப்படும் – நாடார் சங்கம் எச்சரிக்கை!

சென்னை (01 மார்ச் 2020): திமுக, அதிமுக இரு கட்சிகளிலும் டெல்லி மேல்சபையில் நாடார் சமூகத்திற்கு இடம் அளிக்க வேண்டும் என்று தெஷ்ணமாற நாடார் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 26-ந்தேதி நடக்கிறது. ஆறு இடங்களுக்கு 6-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் தேர்தல் நடக்கும். இல்லையேல் போட்டியின்றி 6 பேர் அறிவிக்கப்பட்டு விடுவார்கள். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற மார்ச் 6-ந்தேதி முதல் 13-ஆம் தேதி வரை…

மேலும்...

அதிமுகவுக்கு எச்.ராஜா பகிரங்க மிரட்டல்!

திருவண்ணாமலை (27 பிப் 2020): சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் தமிழக ஆட்சி கவிழும் என்று எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, “. தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அப்படி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். திமுகவை இந்து விரோத கட்சியே அல்ல என்று…

மேலும்...

அதிமுகவில் அடுத்த விக்கெட் – திமுகவின் பந்து வீச்சில் கிளீன் போல்ட்!

சென்னை (24 பிப் 2020): அதிமுகவில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஏற்கனவே அறிவித்தபடி மதுரையில் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். ராஜ கண்ணப்பட்ன் திமுகவில் இணைந்தது குறித்து செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து செல்லூர் ராஜூ கூறியதாவது, ராஜ கண்ணப்பன் தமிழகத்தில் செல்லாத நோட்டாகிவிட்டார். அவர் முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில்…

மேலும்...

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்!

சென்னை (07 பிப் 2020): அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைகிறார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டில் ’மக்கள் தமிழ் தேசம்’ எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர், 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் தனது கட்சியை இணைத்தார். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும்…

மேலும்...

தோல்வியை கொண்டாடி ஆச்சர்யப்படுத்திய திமுக பிரமுகர்!

பரங்கிப்பேட்டை (04 பிப் 2020): தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தோல்வியை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் திமுக பிரமுகர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்…

மேலும்...

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை – பட்டப்பகலில் பயங்கரம்!

ஈரோடு (03 பிப் 2020): ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அண்மையில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பிரமுகர், சின்ன தங்கம் என்ற ராதாகிருஷ்ணன், செல்லம்பாளையத்தில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில், தனது இருசக்கர வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக கொடுத்துவிட்டு இன்று காலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது கறுப்பு நிற ஸ்கார்பியோ காரில் அங்கு வந்த கூலிப்படையினர் 4 பேர், திடீரென…

மேலும்...

பாஜகவில் இணைந்த அதிமுக எம்பி!

சென்னை (02 பிப் 2020): அதிமுக எம்பி சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார். சசிகலா புஷ்பா. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்த சசிகலா புஷ்பா, 2014ஆம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினரக பொறுப்பேற்றார். இந்த நிலையில், ஜெயலலிதா என்னை அடித்தார் என்று கூறி கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பரபரப்பை கிளப்பினார். இதன் தொடர்ச்சியாக, அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். அதேசமயம் வேறு சில கட்சிகளுடன் நெருக்கம் காட்டிய…

மேலும்...