ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி!

நெல்லூர் (29 டிச 2022): ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியின் போது இந்த விபத்து ஏற்பட்டது. கந்துகூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது இந்த சோகம் ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு நகருக்கு சந்திரபாபு நாயுடு சென்றடைந்ததும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவே இந்த சோகத்திற்கு வழிவகுத்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்….

மேலும்...

கர்நாடகாவை அடுத்து ஆந்திராவிலும் ஹிஜாப் தடை!

விஜயவாடா (17 பிப் 2022): விஜயவாடாவில் அமைந்துள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்புகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சினையை தாங்கள் எதிர்கொண்டதில்லை என்றும், தங்களது அடையாள அட்டைகளில் கூட புர்காவுடன் புகைப்படங்கள் இருப்பதாகவும் விஜயவாடா மாணவிகள் தெரிவித்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண பெற்றோர்கள், சமூக பெரியவர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினரிடம் பேசி வருகின்றனர். சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி…

மேலும்...

அரசுப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி!

கோதாவரி (15 டிச 2021): ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தை கடந்தபோது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியிலுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்ததாகவும், மீட்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மீட்புப்படையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும்,…

மேலும்...

அடித்துச் செல்லப்பட்ட பேருந்து – 12 பேர் பலி!

விசாகப்பட்டினம் (20 நவ 2021): ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பேருந்து அடித்த்ச் செல்லப்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. கடப்பா மாவட்டத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் 10 பேர் மீட்கப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நந்தலூரில் பேருந்தில் இருந்து 3 பேரும், குண்டலூரில் இருந்து 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். ND மற்றும் RF குழுக்கள்…

மேலும்...

டிவி விவாத நேரடி நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு!

அமராவதி (24 பிப் 2021): டிவி விவாத நிகழ்ச்சியின்போது பாஜக தலைவர் மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு செய்தி சேனல் ஏபிஎன் ஆந்திர ஜோதி குறித்த நேரடி விவாதத்தின் போது பாஜக தலைவரை அவதூறாக பேசியது. குழு உறுப்பினர்களில் ஒருவர் பாஜக ஆந்திர மாநில பொதுச் செயலாளர் எஸ் விஷ்ணுவர்தனை அவமதித்தார். அமராவதி திட்டங்களுக்கு ரூ .3,000 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசு உத்தரவாதத்தை ஒத்தி வைப்பது குறித்து ஆந்திர அரசு எடுத்த முடிவு…

மேலும்...
Temple Attack bjp

கோவில்கள் மீதான தாக்குதல்களில் பாஜகவினருக்குத் தொடர்பு – டிஜிபி தகவல்!

புதுடெல்லி (17 ஜன 2021): ஆந்திர மாநிலத்தில் கோயில்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவினருக்குத் தொடர்பிருப்பதாக ஆந்திர டிஜிபி சவாங் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. சில கோயில்கள் சேதமடைந்துள்ளன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பலர் கைதாகியுள்ளார்.. இந்நிலையில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்களும் 4 பேர்…

மேலும்...

கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

கோதாவரி (06 செப் 2020): ஆந்திர மாநிலத்தில் கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்….

மேலும்...

தந்தையின் கொலை வழக்கில் முதல்வர் மீது அவரது சகோதரி புகார்!

ஐதராபாத் (30 ஜன 2020): ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன ரெட்டி மீது அவரது சகோதரி புகார் அளித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் தம்பியுமான விவேகானந்த ரெட்டி கடந்த வருடம் மார்ச் மாதம், அதாவது ஆந்திர சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகத் தன் வீட்டில் பல்வேறு வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அப்போது எதிர் கட்சி வரிசையில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி இந்த கொலையை சிபிஐ விசாரிக்க…

மேலும்...

ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி!

சித்தூர் (10 ஜன 2020): குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி ( அம்ம வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் ஜெயகன் மோகன் ரெட்டி பேசியதாவது: தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய ஒவ்வொரு தாய்க்கும் ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய் மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்கள் தயங்குகின்றனா்….

மேலும்...