அதிமுக முன்னாள் எம்.பி கைது!

கோவை (25 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான பழனிசாமி விசாரணை மேற்கொள்ள கே.சி.பழனிசாமி சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டு…

மேலும்...

சிறுவனுடன் சல்லாபம் – ஆசிரியை கைது!

நியூயார்க் (24 ஜன 2020): அமெரிக்காவில், 13 வயது சிறுவனுக்கு, நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி, அவனிடம் காதல் கொண்ட, இந்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஹெப்சிபாவை சேர்ந்தவர் ரூமா பைராபாகா, 24. இந்தியரான இவர், ஹெப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது வகுப்பில் படிக்கும், 13 வயது சிறுவனுக்கும் அந்த ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது. மேலும் அந்த சிறுவனுக்கு மொபைல் மூலம் ஆபாச படங்களை அனுப்பி,…

மேலும்...

எட்டு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவன் கைது!

சிவகாசி (23 ஜன 2020): சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளான். சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தைச் சோ்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியினரின் மகள் பிரித்திகா. மூன்றாவது படித்து வந்த இந்த சிறுமி திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவா் அருகிலுள்ள புதர் பகுதிக்கு இயற்கை அழைப்புக்காகச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல…

மேலும்...

காதலனுடன் இருந்தபோது இளம் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!

வேலூர் (20 ஜன 2020): வேலூரில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்த 24 வயது பெண், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக் கடையில் வேலை செய்து வருகிறாா். அவர் காதலித்து வந்த இளைஞருடன் அந்தப் பெண், சனிக்கிழமை இரவு சாரதி மாளிகை எதிரே உள்ள வேலூா் கோட்டை பூங்காவுக்கு வந்துள்ளாா். இருவரும் இரவு 9.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3…

மேலும்...

இலங்கை விமான நிலையத்தில் பரபரப்பு – 9 பேர் கைது!

கொழும்பு (20 ஜன 2020): இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையைத்தில் 9 பேரை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை தேசிய மற்றும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும்...

எஸ் ஐ வில்சன் படுகொலையில் தொடர்புடையதாக இன்னொருவர் கைது!

பெங்களூரு (18 ஜன 2020): எஸ் ஐ வில்சன் படுகொலை வழக்கில் தொடர்புடையதாக மெகபூப் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் ஐ வில்சன் படுகொலை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை…

மேலும்...

குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐந்து பேர் கைது!

ஸ்ரீநகர் (17 ஜன 2020): குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஐந்து பயங்கரவாதிகள் ஸ்ரீநகரில் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழனன்று பதிவிட்டுள்ளதாவது: குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய ஜெய்ஷ் அமைப்பின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹசரத்பால் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கண்டறியபட்டுள்ளனர். ஹசரத்பால் சதார்பால் பகுதியைச் சேர்ந்த அய்ஜாஸ் அஹமத் ஷேக், அசார் காலனி பகுதியைச்…

மேலும்...

தர்பார் திரைப்பட விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது!

மதுரை (16 ஜன 2020): தர்பார் திரைப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் மதுரையில் நேற்று முன்தினம் தர்பார் திரைப்படம் கேபிள் டிவியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய தகவல்கள் வெளிவந்தது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில்…

மேலும்...

விபச்சார வழக்கில் பிக்பாஸ் நடிகை கைது – திரையுலகில் பரபரப்பு!

மும்பை (12 ஜன 2020): பாலியல் தொழிலில் ஈடுபட்ட, பிக்பாஸ் 13 போட்டியாளரும் பிரபல பாலிவுட் நடிகையுமான அம்ரிதா தனாவோவை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மேற்கு புறநகரப் பகுதியான கோரேகாவ்ன் (கிழக்கு) பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சிலர் போலி வாடிக்கையாளர்கள் போல் உள்ளே நுழைந்து, அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர்….

மேலும்...

டெல்லியில் மீண்டும் பதற்றம் – ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் – வீடியோ!

புதுடெல்லி (09 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் கொடூரமாக கையாண்டு கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்துத்துவா…

மேலும்...