இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள், பள்ளிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இந்துத்துவா அமைப்புகள் மற்றும் குருபா சமூக அமைப்புகள் நடத்திய ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை…

மேலும்...

ஹோலி பண்டிகையின்போது முஸ்லிம் பெண் மீது தாக்குதல் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்டனம்!

புதுடெல்லி (13 மார்ச் 2023): ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படும் பல காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன், ரிக்ஷாவில் பயணித்த ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை குழந்தைகள் குழு ஒன்று தாக்கும் காட்சிகள் வெளியாகின. பெண்களின் எதிர்ப்பையும் மீறி…

மேலும்...

தொழுகைக்கு சென்றவர்கள் மீது கும்பல் தாக்குதல்!

குருகிராம் (13 அக் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள போரா கலான் பகுதியில் உள்ள மசூதிக்கு புதன்கிழமை மாலை தொழுகைக்கு வந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒரு கும்பல் மசூதியையும் சேதப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த சுபேதார் நாசர் முஹம்மது, போரா கலான் பகுதியில் நான்கு முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வசித்து வருவதாக தெரிவித்தார். புதன்கிழமை அவர்கள் மசூதிக்கு தொழுகைக்காக வந்தபோது, ​​சிலர் மசூதிக்குள் புகுந்து தாக்கினர். இனி இங்கு தங்கக்கூடாது…

மேலும்...

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வலியுறுத்தி முஸ்லீம் யூபர் ஓட்டுநர் மீது தாக்குதல்!

ஐதராபாத் (04 செப் 2022): ஐதராபாத்தில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வலியுறுத்தி முஸ்லீம் யூபர் ஓட்டுநர் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அல்காபூர் எக்ஸ் ரோட்டில் இருந்து ஒரு பயணியை அழைத்து வருவதற்காக செய்யத் லத்தீப் என்ற யூபர் ஓட்டுநர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அவருடைய வாகனத்தை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட வலியுறுத்தியது. ஆனால்…

மேலும்...

இஃப்தார் நோன்பு துறக்கும் நேரத்தில் காவல்துறை முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்!

கார்கோன் (15 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் குறிப்பாக காவல்துறையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையின் மிருகத்தனத்தை பிரதிபலிக்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரின் சில பகுதிகள் 144 பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கையாளர் அர்பாப் அலி பகிர்ந்துள்ள வீடியோவில், ஞாயிற்றுக்கிழமை நகரில் வெடித்த கலவரத்தின் போது , நோன்பு திறக்கும் வேளையில் பால் வாங்க வெளியே வந்த ஒரு…

மேலும்...

ஹலால் இறைச்சி விற்பனையாளர் மீது பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (01 ஏப் 2022): கர்நாடகாவில் ஹலால் இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்துவா குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினர் வியாழக்கிழமை பத்ராவதியில் ஒரு முஸ்லிம் விற்பனையாளரைத் தாக்கியுள்ளது. இதுகுறித்து ANI இடம் பேசிய ஷிவமொக்கா காவல் கண்காணிப்பாளர் (SP) BM லக்ஷ்மி பிரசாத், தொடர்புடைய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். “பஜ்ரங் தள் ஆர்வலர்கள் வாக்குவாதம் செய்து ஒரு முஸ்லீம் வியாபாரியைத் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து பத்ராவதியில்…

மேலும்...

முதியவர்களை கொடூரமாக தாக்கிய பாஜகவினர்!

புதுச்சேரி (29 மார்ச் 2022): மகன் வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு பாஜகவினர் முதியவர்களை தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் மனைவுயுடன் மளிகை கடை நடத்தி வருபவர் குமரேசன்(65), இவரது இரண்டாவது மகன் கணேஷ்குமார் செய்து வந்த தொழிலில் நஷ்டம் அடைந்தது .மேலும் கணேஷ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவர் கருவடிக்குப்பத்தில் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை அப்போது பிரகாஷ்…

மேலும்...

முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உத்திர பிரதேசத்தில் கொடூரம்!

நூர்பூர் (22 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அஸ்ரெளலி காரமத்தை சேர்ந்த ஜாபர் மற்றும் அவரது இளைய சகோதரர் நூர் ஆகியோரை நூர்பூர் கிராம மக்கள் தாக்கியதில் ஜாபர் உயிரிழந்தார். நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இரண்டு இளைஞர்களும் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் கௌசாம்பியின் அறிக்கையின்படி,”திங்கள்கிழமை காலை…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி!

துபாய் (31 ஜன 2022):ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹூத்தி படையினர் மீண்டும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது இரு வாரங்களுக்கு முன் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரமும் அமீரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் முற்பட்டனர். எனினும் இதை அமீரக படையினர் இடையிலேயே…

மேலும்...

அபுதாபி ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு இந்தியர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்!

அபுதாபி (18 ஜன 2022): அபுதாபி ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மூவர் கொல்லப்பட்டனர். உலக நாடுகள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தோடு…

மேலும்...