ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் மீதான தடை ரத்து!

மும்பை (11 ஜன 2023): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு பேபி பவுடரை தயாரிக்கவும், விற்கவும், விநியோகிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கிய மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அந்நிறுவனம் பேபி பவுடரை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் எஸ் ஜி டிகே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 2018 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட நிறுவனத்தின் பேபி பவுடரின் மாதிரியை சோதனை செய்வதில் தாமதம் செய்ததற்காக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) மீது…

மேலும்...

பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

புதுடெல்லி (03 அக் 2022): தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்டிற்கும் (பிஎஃப்ஐ) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவுக்கும் (எஸ்டிபிஐ) எந்த தொடர்பும் இல்லை என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. PFI தொடர்பான அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீதான நடவடிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் SDPI யையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் PFI மற்றும் SDPI இடையே எந்த தொடர்பும் இல்லை…

மேலும்...

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஐந்தாண்டு தடை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அமைப்பிற்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இது சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது. PFI மற்றும் தொடர்புடைய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. யுஏபிஏ பிரிவு 3ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. . கேம்பஸ் ஃப்ரண்ட், ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன்,…

மேலும்...

ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (22 ஏப் 2022): நாடு முழுவதும் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் ஹலால் சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் வழக்கறிஞர் விபோர் ஆனந்த், நாட்டில் 85 சதவீதம்பேர் ஹலால் பொருட்களை விரும்பவில்லை எனக்கூறி மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த மனுவில் “இந்திய அரசியலமைப்பின் 14, 21 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளின்படி இதனை செயல்படுத்த வேண்டும். ….

மேலும்...

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை – பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்!

உடுப்பி (22 ஏப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடுப்பி மாவட்டத்தி ஹிஜாப் அணிந்து 12 ஆம் வகுப்பு தேர்வெழுத சென்ற மாணவிகள் இருவர் தேர்வு எழுத அனுமதி மறுப்பட்டுள்ளனர். அனுமதி மறுக்கப்பட்ட இருவரும் ஹிஜாபுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனு அளித்தவர்கள் ஆவர். கர்நாடகா உடுப்பியில், இரண்டாம் பியூசி (12ஆம் வகுப்பு) தேர்வு எழுத வித்யோதயா பியூ கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த அலியா அசாதி மற்றும் ரேஷ்மா…

மேலும்...

திரைத்துறையினருக்கு இது ஒரு எச்சரிக்கை – ஜவாஹிருல்லா!

சென்னை (19 ஏப் 2022): மனிதநேய மக்கள் கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த, சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்ககக் கோரியிருந்தார். இந்நிலையில் தி.இந்து இதழிற்கு அளித்த பேட்டியில் இது தமிழ் திரையுலகிற்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என தெரிவித்துள்ளார்.. அவரது பேட்டி: ஏன் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்? நான் படத்தைப் பார்க்கவில்லை,…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு…

மேலும்...

மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க பள்ளி ஆசிரியர்கள் தடை – தமிழகத்திலுமா இப்படி?

கிருஷ்ணகிரி (08 ஏப் 2022): மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க ஆசிரியர்கள் தடை விதித்ததால் பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கொரல்தந்தம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப் பட்டு வருவதால் மாணவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இதற்கு தடை விதித்த பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, நோன்பு இருப்பதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி பால் முகவர்கள் முதல்வருக்கு கோரிக்கை!

சென்னை (07 ஏப் 2022): “நடிகர் விஜய் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கவும், வன்முறை செயலில் ஈடுபடும் அவரது ரசிகர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜய் நடித்த #பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை…

மேலும்...

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு குவைத்தில் தடை!

குவைத் (05 ஏப் 2022): விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில், குவைத் அரசாங்கம் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம், பணயக்கைதிகள் திரில்லர். குவைத்தின் நலன்களுக்கு எதிரான முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல்  பீஸ்ட் திரைப்படம் காட்டுவதால். படத்தை தடை செய்ய அரசு முடிவு செய்தது. முன்னதாக, துல்கர் சல்மானின் குருப் மற்றும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படங்களும் அங்கு தடை செய்யப்பட்டன. பீஸ்ட் திரைப்படம்…

மேலும்...