குடியரசு தினம் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றினார்!

சென்னை (26 ஜன 2020): குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, முப்படைகளின் ஊா்திகள், தமிழக அரசுத்…

மேலும்...

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் வாழ்த்து!

சென்னை (25 ஜன 2020): நாட்டின் 71 வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத்தையும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்திட உறுதி கொள்வோம். நம் வாழ்வின் மூச்சு, செயலை அர்ப்பணித்து, தேசத்தின் பெருமையை கட்டிக்காப்பதில் தொடர்ந்து முன்னேறி செல்ல முன்வருவோம். அரசியலமைப்பு உருவாக பங்களித்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டமியற்றிய மேதைகளை நினைவு கூர்வோம். என்று…

மேலும்...