பள்ளியில் குண்டுவெடிப்பு – மாணவர்கள் பலி!

காபூல் (01 டிச 2022): ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், 16 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் ஆப்கான் வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானி…

மேலும்...

கோவையில் கோவிலுக்கு சென்ற முஸ்லிம் ஜமாத்தினர்!

கோவை (04 நவ 2022): கோயம்புத்தூரில் முஸ்லிம் ஜமாத்தினர் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். கோவை மாவட்டம் உக்டத்தில் கடந்த 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே உள்ள கோயிலில் மத நல்லிணக்க சந்திப்பு நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இனையத்துல்லா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சங்கமேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பூசாரி உள்ளிட்டோரை சந்தித்தனர்….

மேலும்...

அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை!

அஹமதாபாத் (18 பிப் 2022): அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 56 பேர் பலியானார்கள், 200 பேர் காயமடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதில், 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக இந்த…

மேலும்...

காபூல் விமான நிலையத்தை அதிர வைத்த வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

காபூல் (27 ஆக 2021): ஆப்கானிஸ்தன் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 90 உயிரிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், காபூல் இரண்டு தற்கொலை குண்டுவீச்சாளர்கள் மற்றும் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் மக்கள் கூட்டத்தைத் தாக்கியதில் குறைந்தது 90 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க துருப்புக்களும் கொல்லப்பட்டதாகவும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி, தலிபான்கள் “குண்டுவெடிப்பைக் கண்டித்துள்ளனர்”,இஸ்லாமிக் ஸ்டேட் குழு அதன் அமாக் செய்தி சேனலில் இந்த…

மேலும்...

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!

புதுடெல்லி (29 ஜன 2021):டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் கூறும் போது, “குண்டுவெடிப்பு தொடர்பாக மாலை 5:45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” என கூறினார். குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும்...

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!

ராவல்பிண்டி(13 ஜூன் 2020): பாகிஸ்தான் ராவல்பிண்டியில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளார். பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கபரி பஜாரில் சில மர்மநபர்கள் வெடிகுண்டை வீசிச் சென்றனர். அந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். புலனாய்வு குழுக்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அப்பகுதியிலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் சிஜிதுல் ஹாசன் தெரிவித்தார். இந்த தாக்குதலில் மூடப்பட்ட கட்டிடம்…

மேலும்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி!

விருதுநகர் (20 மார்ச் 2020): விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது சிப்பி பாறை . இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வின் காரணமா பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது இந்த விபத்தில்…

மேலும்...

பெங்களூரில் பயங்கரம் – வெடித்துச் சிதறிய மர்ம பொருள்: எம்.எல்.ஏ ஹாரிஸ் படுகாயம்!

பெங்களூரு (22 ஜன 2020): பெங்களூரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மர்ம பொருள் வெடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது, பெங்களூரு சாந்திநகரில் உள்ள வண்ணார்பேட்டை பஜார் தெருவில், நடந்த பிறந்தநாள் விழாவிற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ ஹாரிஸ் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அப்போது அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அப்போது இரவு 8.30 மணியளவில், திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில எம்.எல்.ஏ ஹாரிஸ் உட்பட 7…

மேலும்...