மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் இருக்க வாய்ப்பு!

புதுடெல்லி (17 ஜன 2020): மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. செல்லிடப்பேசி எண் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்புடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு மட்டுமே கேட்கப்படவுள்ளன. தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி…

மேலும்...

அமெரிக்க சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் (VIDEO)

சியாட்டில் (17 ஜன 2020): அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தெற்காசிய நாடுகளின் மதச்சார்பற்ற ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியற்றிற்கு எதிராக சியாட்டில் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் குறித்து விளக்கம் அளித்து பேசிய நகரசபை உறுப்பினர் கேஷ்மா சவந்த் (Kshama Sawant) குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை வலதுசாரி சிந்தனை உள்ள…

மேலும்...

முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்ததால் துன்புறுத்தப்பட்டேன் – சமூக ஆர்வலர் ராபின் வர்மா!

லக்னோ (16 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் ராபின் வர்மா சிறையில் பட்ட சித்ரவதைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், உத்திர பிரதேசம் லக்னோவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ராபின் வர்மாவும் கைதானவர்களில் அடங்குவார்.. தற்போது வெளியாகியுள்ள அவர் போலீசார் பலர் தன்னை கடுமையாக…

மேலும்...

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

திருவனந்தபுரம் (16 ஜன 2020): கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) எடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் கேரள அரசு ஒரு படிமேலே போய் சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதனை எதிர்க்கும் உறுதியான மாநிலமாக திகழ்கிறது….

மேலும்...

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – (VIDEO)

மும்பை (16 ஜன 2020): இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் பிசிசிஐ அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே மும்பையில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது, பார்வையாளர்கள் ‘No CAA-NRC-NPR’ என்ற வாசகங்களுடன் டீ சர்ட் அணிந்து இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் இதனை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டப் பாதையிலிருந்து தடம் மாறுகிறதா திமுக?

CAA NRC விசயத்தில் தி.மு.க.வின் சமீபத்திய நகர்வுகள், அந்தக் கட்சி எந்த திசையை நோக்கி நகர்கிறது என்கிற கேள்வியை எழுப்ப வைக்கிறது. ஹலோ எஃப்.எம்.மில் துரைமுருகன் வெளிப்படுத்திய கருத்து; சட்டசபையில் “இந்திய முஸ்லிம்களுக்கு சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பில்லை” என்று சொல்லியது; காங்கிரஸ் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது என மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பதிலிருந்து, தி.மு.க. விலகிச் செல்வதைக் காண முடிகிறது. தந்தைப் பெரியாரோடு களம் கண்டு, தனது சமூகநீதிச் செயல்பாடுகளால் சமத்துவப்…

மேலும்...

சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பிம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி பகுதியில் உள்ள ஜும்மா மஸ்ஜித்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு தலைமை தாங்கியதை அடுத்து சந்திரசேகர் ஆசாத் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வரின் அடுத்தடுத்த அதிரடி!

திருவனந்தபுரம் (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மாநில அரசுகளில் கேரள அரசு முதன்மை வகிக்கிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க ஆளாத மாநில அரசுகள் சி.ஏ.ஏ, அதோடு சேர்ந்த தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) – தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றையும் செயல்படுத்த…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து உபி பீகாரிலும் தொடங்கிய தொடர் போராட்டம்!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அதே வழியில் உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பொது மக்கள் அமைதி வழி தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு மைக்ரோ சாஃப்ட் சிஇஓ கடும் எதிர்ப்பு!

புதுடெல்லி (15 ஜன 2020): இந்திய குடியுரிமை சட்டத்தை மைக்ரோ சாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா எதிர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குடியுரிமை திருத்த்தச் சட்டம் அதிக அளவில் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. எனினும் மத்திய அரசு அதனை கண்டு கொள்வதாக தெரிவதில்லை. நாடெங்கும் நடைபெறும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் கூட ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. இந்நிலையில் பல முக்கிய பிரமுகர்களும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கணினி உலகின் ஜாம்பவான் மைக்ரோ…

மேலும்...