இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை!

சென்னை (14 மார்ச் 2020):சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குடியுரிமை சட்டத்திருத்தம், என்.ஆர்.சி, என்பிஆர் தொடர்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே நிலவும் சந்தேகங்களை களைவது பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து வருகின்றனர். நேற்று குடியுரிமை சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தலைமை செயலாளர் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டி…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல – தலைமை செயலருக்கு முஸ்லிம் லீக் பதிலடி!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தலைமை செயலருக்கு கோரிக்கை வைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய…

மேலும்...

என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. கணக்கெடுப்பின்போது யாரும் ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லையென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:- என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் என்.பி.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. என்னிடமும் பிறப்புச் சான்றிதழ் இல்லை….

மேலும்...

இஸ்லாமிய தலைவர்களுக்கு தலைமை செயலர் அழைப்பு!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொது மக்களிடையே பல்வேறு ஐயாப்படுகள் உள்ளன. குறிப்பாக சிறுபான்மையினரிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய கட்டடம் 2 வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்தாலோசிக்கும்…

மேலும்...

என்.பி.ஆருக்கு ஆவணங்கள் எதுவும் சமர்பிக்க தேவையில்லை – அமித் ஷா!

புதுடெல்லி (13 மார்ச் 2020): “என்.பி.ஆருக்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமித்ஷா, “என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஆவணங்கள் ஏதும் மக்கள் அளிக்கத் தேவையில்லை. உங்களிடம் எந்த தகவல் இருக்கிறதோ அதை அளித்தால் மட்டும் போதும். தெரியாத கேள்விகளை நீங்கள் விட்டு விடலாம்” என்றார். மேலும்…

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

கோவை (12 மார்ச் 2020): கோவை ஷஹீன்பாக் போராட்டம் 5 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் ஸ்டைலில் நாடெங்கும் பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை ஆத்துப்பாலம் இஸ்லாம் ஷாஃபி ஜமாத் மசூதி மைதானத்திலும் ஷஹீன்பாக் ஸ்டைலில் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டம் நடைபெறும் பகுதி…

மேலும்...

நேர காலம் பார்த்து நிதானமாக ஆதரவளித்த ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆதரவளித்தார். சென்னை, வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் மற்றும் மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 27 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டங்களை பெண்களே முன்னின்று நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு திருமாவளவன், கருணாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தமிழக சட்டப் பேரவையில் சிஏஏவை…

மேலும்...

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு!

சென்னை (12 மார்ச் 2020): தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது: 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும். அதில்,…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – மருத்துவமனைக்கு சீல்!

அலகாபாத் (09 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில், கணவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியின் மருத்துவமனைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். டாக்டர் மாதவி என்பவர் ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவமனை வைத்துள்ளார். இவரது கணவர் ஆஷிஷ், அகில இந்திய கிஷான் மஜூர் சபாவின் செயலாளராக உள்ளார். இவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது மனைவியின் மருத்துவமனைக்கு ஞாயிறன்று சோதனை என்ற பெயரில் சென்ற போலீசார், டாக்டர் மாதவியின்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் வலுவான செய்தி அளி்ப்போம் – தெலுங்கானா முதல்வர் அதிரடி!

ஐதராபாத் (08 மார்ச் 2020): நான் வீட்டில் பிறந்தவன். எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை. என் தந்தையின் சான்றிதழுக்கு நான் எங்கே செல்வேன்? என்று தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) ஆகியனவற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் கொந்தளித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திர சேகரராவ், “நான் கிராமத்தில் எனது வீட்டில் பிறந்தேன்….

மேலும்...