இந்தி நடிகர் ரிஷிகபூர் மரணம்!

மும்பை (30 ஏப் 2020): புற்று நோய் பாதிப்பு காரணமாக பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் காலமானார் கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று 2019-ம் ஆண்டு நாடு திரும்பினார். இந்நிலையில்நேற்று இரவு இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மும்பை எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும்,…

மேலும்...

அடுத்தடுத்து குழந்தைகள் – நடிகை அமலாபால் அதிரடி!

சென்னை (30 ஏப் 2020): திரைப்பட நடிகை அமலாபாலுக்கு சினிமா வாய்ப்பு உள்ளதோ இல்லையோ, இப்போது சமூக வலைதளங்களில்தான் அதிக பிசியாக உள்ளார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகை அமலாபால் திடீரென இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார். கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் இருவரும் விவாகரத்து பெற்றனர். அமலாபால் என்றாலே சர்ச்சை என்பது ஆகிவிட்டது. இவரின் விவாகரத்துக்குப் பின்னால், இவரையும் தமிழின் பிரபல நடிகரையும் முன்னிலை படுத்தி கிசுகிசுக்கப்பட்டது. அது…

மேலும்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை குரு மரணம்!

திருவனந்தபுரம் (06 ஏப் 2020): பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குருவும் மலையாள இசையமைப்பாளருமான அர்ஜுனன் மாஸ்டர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. 1968-ல் இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார் அர்ஜுனன். 200 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். கே.ஜே. யேசுதாஸ், அர்ஜுனனின் இசையில் தான் முதலில் பாடினார். 1981-ல் அர்ஜுனன் இசையமைத்த Adimachangala என்கிற மலையாளப் படத்தில் முதல் முதலாக கீ போர்டு வாசித்தார் ரஹ்மான். இதனால் அர்ஜுனன் மீது…

மேலும்...

பிரபல தமிழ் இளம் நடிகர் திடீர் மரணம்!

சென்னை (27 மார்ச் 2020): பிரபல தமிழ் இளம் நடிகர் சேதுராமன் திடீரென மரணம் அடைந்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தவர் நடிகர் டாக்டர் சேதுராமன். அதன் பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் சேதுராமன் தனது 36 வது வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

பிரபல இயக்குநர், நடிகர் விசு மரணம்!

சென்னை (22 மார்ச் 2020): பிரபல இயக்குநரும் நடிகருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித்…

மேலும்...

குடியுரிமை சட்டம் குறித்து முதன் முதலாக வாய் திறந்த நடிகர் விஜய்!

சென்னை (15 மார்ச் 2020): குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் விஜய் வாய் திறந்துள்ளார். நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிறன்று சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். இந்தநிகழ்ச்சியில் நடிகர் விஐய் பேசியதாவது: நாட்டில் மக்களுக்குத் தேவையானதைத்தான் சட்டமாக உருவாக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது. விஜய் சேதுபதி பெயரில் மட்டுமல்ல; எனக்கு மனதிலும் இடம்…

மேலும்...

தர்பார் தோல்வி -குடியுரிமை சட்ட ஆதரவு: ரஜினியின் அடுத்த படத்திற்கு சிக்கல்!

சென்னை (11 பிப் 2020): தர்பார் படம் படுதோல்வி அடைந்ததாலும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாலும் அடுத்த படத்தில் ரஜினியின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிப்பில் லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்தில் ரஜினியின் சம்பளம் குறைக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் குடியுரிமை சட்டத்திற்கு…

மேலும்...

மாணவர்களுக்கு இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டீர்களே மிஸ்டர் ரஜினி?

சென்னை (06 பிப் 2020): அரசியல்வாதிகளைப் பற்றி எச்சரிப்பது இருக்கட்டும், சினிமா ஸ்டார்கள் மாணவர்களை பயன்படுத்துவதை ஏன் எச்சரிக்கவில்லை? என்று நெட்டிசன்கள் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். மேலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது மிகவும் கவனமாக ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்றும்…

மேலும்...

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை – படப்பிடிப்பு நிறுத்தம்!

சென்னை (05 பிப் 2020): நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையின திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் வழங்கி, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது…

மேலும்...

முஸ்லிமாக தோன்றும் நடிகர் சிம்பு!

சென்னை (04 பிப் 2020): வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு முஸ்லிம் வேடத்தில்நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட்…

மேலும்...