கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? -பாரத் பயோடெக் விளக்கம்!

புதுடெல்லி (19 ஜன 2021): பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின்னரே தடுப்பூசி போட வேண்டும்.  கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது. மற்றொரு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் கோவாசின் எடுத்துக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியதிலிருந்து தடுப்பூசி பெற்றவர்களில் சிலர், சில பக்கவிளைவுகளைச் சந்தித்ததாக வெளியான தகவல்களுக்கு…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!

ஐதராபாத் (16 ஜன 2021): கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அந்நிறுவன படிவத்தில் கூறப்பட்டிருப்பதாவது : தடுப்பூசி பெறுநர்களுக்கு ஏதேனும் பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படும். மேலும், பக்கவிளைவுகள் தடுப்பூசிக்குத் தொடர்புடையது என நிரூபிக்கப்பட்டால், இழப்பீடும்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது – மத்திய அரசு பின்வாங்கல்!

புதுடில்லி (14 ஜன 2021): கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மட்டுமே சட்டப்படி பொறுப்பாவார்கள் என்றும் மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கோவிட் தடுப்பூசி குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது, எனவே அதன் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமு ம் பொறுப்பேற்க…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களுக்கும், கோவிட் 19 தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம்!

துபாய் (12 ஜன 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் தடுப்பூசி வழங்குவதில் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய சங்கங்களும் கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியர்களுக்கு உதவி வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டினர் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் தடுப்பூசி பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

மேலும்...

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி – முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு!

சென்னை (11 ஜன 2021): தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 16-ந் தேதி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்றைய…

மேலும்...

சவுதியில் தன்னார்வத்தோடு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இந்தியர்கள்!

ரியாத் (07 ஜன 2021): சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தின் முதல் கட்டத்தில் பல இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மதம் முதல் சவுதியில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் தடுப்பூசியை தன்னார்வத்தோடு பெற்றுக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்முலம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி பலர் தடுப்பூசிக்கு…

மேலும்...

மோடி அமைச்சரவையில் உள்ளவர்கள் முதலில் கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் – தலைவர்கள் கோரிக்கை!

புதுடெல்லி (04 ஜன 2021): கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை கட்டங்கள் முடிவடையாமல் மக்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரண்டு கட்ட சோதனை மட்டுமே முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட சோதனை முடிவடைவதற்கு முன்னர் தடுப்பூசியை நடைமுறைப்படுத்த மோடி அரசாங்கத்தின் அவசர நடவடிக்கைக்கு எதிராக முக்கிய புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன, இது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி ஒப்புதலுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் எம்.பி. கூறுகையில், கோவாக்ஸின்…

மேலும்...

சாதாரண மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலகுவாக கிடைக்காது – எய்ம்ஸ் இயக்குனர் கருத்து!

புதுடெல்லி (08 நவ 2020): இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், 2022ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என்று தேசிய கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர் குழுவில் உறுப்பினரும், எய்ம்ஸ் இயக்குனருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம் என்றும், தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கொரோனா வைரஸ்…

மேலும்...

தடுப்பூசியால் கொரோனாவை ஒழிக்க முடியாது – லண்டன் நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

லண்டன் (22 அக் 2020): தடுப்பூசியால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது 4 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.70 லட்சத்தினை தாண்டியது. தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில்…

மேலும்...

கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு!

மாஸ்கோ (15 அக் 2020): கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார். ’ஸ்புட்னிக் 5’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில்…

மேலும்...