கொரோனா வைரஸ் குறித்து மத்திய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து – விளாசும் நெட்டிசன்கள்!

புதுடெல்லி (19 மார்ச் 2020): கொரொனா வைரஸ் நிவாரணமாக பாஜக அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் ஆதாரமில்லாத சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். சீனாவில் மட்டுமே பரவிய கொரோனா உலகமெங்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இன்றுவரை 169 பேர் பாதிக்கப் பட்டனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்த வதந்தியும் பரவி மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இது இப்படியிருக்க பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில்…

மேலும்...

கொரோனா வைரஸ் – கனிமொழி எம்பி கோரிக்கை!

சென்னை (19 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கனிமொழி எம்பி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் 169 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது பரவாமல் தடுக்கும் வகையில், ” போராட்டங்கள், திருமண நிகழ்வுகள் போன்ற ஒன்றுகூடல்களை சற்று ஒத்திவைக்கலாம். ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், அக்கறையோடும் இருப்போம்.” என்று கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்...

சிஏஏ வை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணி!

சென்னை (19 மார்ச் 2020): சிஏஏவை எதிர்த்து ததஜ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இணைந்து நேற்று சென்னையில் பேரணி நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை தவிர தமிழகத்தின் பல பகுதிகளில் டெல்லி ஷாஹீன் பாக் மாடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அரசின் உத்தரவை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க பல இஸ்லாமிய…

மேலும்...

வெளிநாடுகளில் உள்ள 276 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (19 மார்ச் 2020): ஈரான், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களில் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 9000 த்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 169 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், வைரஸ் அறிகுறியுடன் உள்ள 5,700 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலக அளவி இதுவரை 276 இந்தியர்கள்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்வு!

புதுடெல்லி (18 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 169 ஆக உயர்ந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய கணக்கின்படி ஒரே நாளில் 30 பேர் கொரோனா பாதிக்கப் பட்ட நிலையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவாமல் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகள், கல்லுரிகள், திரையரங்குகள்,…

மேலும்...

கொரோனா பாதிகப்பட்டால் உதவ தயார் நிலையில் இலவச ஆம்புலன்ஸ் – VIDEO

கரூர் (18 மார்ச் 2020): கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் மற்றும் கொங்கு ஆம்புலன்ஸ் இணைந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ கொங்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலையடுத்து ஆங்காங்கே பொதுமக்கள் பெருமளவில் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில். இந்தியாவில் ஒரு சில இடங்களிலும், ஒரு சில மாநிலங்களிலும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கின்றது. இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள்…

மேலும்...

ஜப்பான் தயாரிப்பு மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக சீனா தகவல்!

பீஜிங் (18 மார்ச் 2020): ஜப்பானின் கண்டுபிடிப்பான புளூ (flu) மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள்… நொடிக்கு நொடி… பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து முதல் நிவாரணம் பெறும் மருந்து வரை ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் கண்டுபிடிப்பு மருந்தான flu drug favipiravir (also known as Avigan) என்ற மருந்து…

மேலும்...

கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி!

தெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் அதிபர் மீது,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்களுக்கு உடனடியாக தகவல் தரப்படவில்லை…

மேலும்...

தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – தனிமைப் படுத்தப்பட்ட 2984 பேர்!

சென்னை (18 மார்ச் 2020): தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த இளைஞர் 20 வயதுடையவர். அவர் ரயில் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்….

மேலும்...

கொரோனா வைரஸ் – ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 1135 ஆக உயர்வு!

தெஹ்ரான் (18 மார்ச் 2020): சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 147 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும்...