சினோஃபாம் மற்றும் சினோவாக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு சவூதி அரேபியா அனுமதி

ரியாத் (25 ஆக 2021): சவூதி அரேபியா மேலும் இரண்டு கோவிட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர் பாயன்டெக், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மோடெனா ஆகிய நான்கு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மேலும், சீன தடுப்பூசிகளான சினோஃபாம் மற்றும் சினோவாக்கிற்கு சவுதி சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை ஆறாகக் கொண்டுவருகிறது. அதேவேளை முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஜான்சன்…

மேலும்...

3 டோஸ் கொண்ட சைகோவ்- டி கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி!

புதுடெல்லி (20 ஆக 2021): 3 டோஸ் கொண்ட சைகோவ்- டி கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவை தடுக்கும் வகையில் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முடுக்கி விட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது…

மேலும்...

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பேஸ்புக் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்!

புதுடெல்லி (14 ஆக 2021): கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட 300 க்கும் அதிகமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனெகா மற்றும் ஃபைசருக்கு எதிராகவும், அவை மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் என்று கூறி பேஸ்புக்குகளில் சிலர் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஒரு குழு செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமாக இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்களிடையே…

மேலும்...

கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!

ரியாத் (02 ஆக 2021): சவூதியில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை சவூதி சுகாதரத்துறை விதித்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கோவிட் தடுப்பூசியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் வேலைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேலை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தபடி பணிபுரியலாம். அதற்குள் தடுப்பூசி பெறவில்லையெனில் கட்டாய விடுப்பு அளிக்கப்படும்…

மேலும்...

மருத்துவத்துறைக்கு எதிராக பாபா ராமதேவ் மீண்டும் திமிர் பேச்சு!

புதுடெல்லி (26 மே 2021): இந்திய மருத்துவர் சங்கத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது; அலோபதி மருந்துகளால்தான் பல லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 10,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்தனர் என யோகா குரு என தம்மை அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் பேசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மத்திய அரசு தலையிட்டும் பிரச்னை…

மேலும்...

தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் – தடுப்பூசி நிறுவனங்கள் விண்ணப்பிக்க கோரிக்கை!

சென்னை (15 மே 2021): தமிழக அரசு நேரடியாக கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய முன்வந்துள்ள நிலையில் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு போதிய அளவிலான மருந்துகள் இல்லாததால் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதலுக்கு இன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்…

மேலும்...

பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசியின் பெயர் இதுதான்!

புதுடெல்லி (02 மார்ச் 2021): பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அவர் எந்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்திலுள்ள ஒரு மருந்து ஆய்வகத்தைப் பிரதமர் மோடி விசிட் செய்த பாரத் பயோடெக் நிறுவனம்தான் முழுக்க முழுக்க இந்த கோவாக்சின் தடுப்பூசியை…

மேலும்...

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

சென்னை (22 ஜன 2021): பிற நாடுகளைப் போல பிரதமர்,முதல்வர், அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இன்று சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ”சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும்…

மேலும்...

புனே கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

புனே (21 ஜன 2021): நாட்டின் முன்னணி கோவிட் தடுப்பூசி உற்பத்தி மையமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புனே சீரம் நிறுவனத்தில் டெர்மினல் ஒன் அருகே மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தீயணைப்பு படையின் பத்து பிரிவுகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. கோவிட் தடுப்பூசி உற்பத்தி ஆலை தீ விபத்து இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம் எதுவும்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவுள்ள பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள்!

புதுடெல்லி (21 ஜன 2021): கோவிட் தடுப்பூசி விநியோகத்தின் இரண்டாம் கட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர்கள் கோவிட் தடுப்பூசி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரைத் தவிர, மாநில முதல்வர்களை தவிர 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் தெரிகிறது. கடந்த ஜனவரி 16 முதல் இந்தியாவில் விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள், சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவகோசின் ஆகியவை என்பது…

மேலும்...