கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

சென்னை (20 ஜன 2021): தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், “நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் கொள்கிறேன். ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக, ஐ எம் ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன். மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் நானே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள உள்ளேன்” என்று…

மேலும்...

தமிழகம், கேரளா தடுப்பூசி போடுவதில் பின்தங்கல்-மத்திய அரசு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (19 ஜன 2021): தடுப்பூசி போடுவதில் கேரளா மற்றும் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. முன்னுரிமை பிரிவில் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் கூட இதுவரை தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசியை நம்புமாறு சுகாதார ஊழியர்களை வலியுறுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுடனான வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடந்த உரையாடலில் மத்திய அரசு இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா தடுப்பூசி போட தயங்குகின்றன என்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்துள்ளது. தடுப்பூசி…

மேலும்...

சவூதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி!

ரியாத் (17 ஜன 2021): சவுதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கிறது. இதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வுக்குப் பிறகு வழங்கப்படும். சவுதி அரேபியா உருவாகியுள்ள கோவிட் 19 தடுப்பூசியின், முன் மருத்துவ ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. தொற்று நோயியல் பேராசிரியர் டாக்டர் இமான் அல் மன்சூரின் தலைமையில், இமாம் அப்துல் ரஹ்மான் பின் பைசல் பல்கலைக்கழகம் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்.

மேலும்...

கொரோனா தடுப்பூசியும் முஸ்லிம்களும் – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

லக்னோ (13 ஜன 2021); “இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் 19 தடுப்பூசிகளை நம்பாத முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம்.” என்று உத்தரபிரதேசம் சர்தானாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ சங்கீதா சிங் சோம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் “சில முஸ்லிம்கள் நம் நாட்டையும், நமது விஞ்ஞானிகளையும், நமது போலீஸ் படையையும், பிரதமர் மோடியையும் நம்பாதது துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் ஆன்மா பாகிஸ்தானின் ஆன்மா. அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், எங்கள் விஞ்ஞானிகளின் பணியில் சந்தேகம் கொள்ளக்கூடாது, ”என்று சங்கீதா சிங்…

மேலும்...

சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போட பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ரியாத் (06 ஜன 2020): சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. கோவிட் 19 பரவலை தடுக்க பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சவூதி அரேபியாவில் கடந்த மாதம் முதல் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள் நாட்டு வெளி நாட்டினர் அனைவரும் செஹாத்தி அப்ளிகேஷன் பயன்பாட்டின் மூலம் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய…

மேலும்...

பாஜக அரசு தரும் கொரோனா தடுப்பூசியை நம்ப முடியாது – அகிலேஷ் யாதவ் பகீர்!

லக்னோ (02 ஜன 2021): பாஜக அரசின் தடுப்பூசியை நம்ப முடியாது என்று இப்போது தடுப்பூசி பெறவில்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கோவிட் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் அகிலேஷ் யாதவ் இவ்வாறான கருத்தை முன்மொழிந்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “எங்கள் தலைமையிலான அரசு அமைக்கப்படும் போது, ​​அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். அதேவேளை பாஜக அரசு வழங்கும் தடுப்பூசி நம்பத்தகுந்ததல்ல” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

மேலும்...

கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்.- சவூதி சுகாதார அமைச்சர் தகவல்

ரியாத் (23 டிச 2020): சவுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஹம்மது அல்-அப்துல் அலி செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அமைச்சக அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் தடுப்பூசி எடுத்த அனைத்து உள்நாட்டு , வெளிநாட்டவர்களுக்கு எந்த எதிர் அறிகுறிகளையும் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டினார். அமைச்கத்தின் மொபைல் செயலி செஹாட்டி (என் உடல்நலம்) மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்யுமாறு அனைவருக்கும் அல்-அப்துல்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

அம்பாலா (09 டிச 2020): கொரோனா தடுப்பூசி சோதனைக்காக தன்னார்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இதில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த பைசர் நிறுவனம் கோரிக்கை!

புதுடெல்லி (06 டிச 2020): உலகளாவிய மருந்து நிறுவனமான ஃபைசர்,கோவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து மற்றும் பஹ்ரைனில் உரிமங்களைப் பெற்ற பின்னர் இந்தியாவில் பயன்படுத்த உடனடி ஒப்புதல் கோரியுள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி, சோதனைகளில் 95 சதவிகித சாதகமான முடிவுகளைக் கொண்டிருப்பதாகக் கூ றியுள்ளது. பிரிட்டனும் பஹ்ரைனும் ஏற்கனவே ஃபைசருக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதனை அடுத்து மருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விநியோகிக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது. ஆனால் இதுவரை , ஃபைசர்…

மேலும்...

94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு!

நியூயார்க் (16 நவ 2020): அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம்…

மேலும்...