நமக்கு உணவளிப்பவர்களின் கோரிக்கைக்காக நேரம் ஒதுக்க முடியவில்லையா? – ஹர்பஜன் கேள்வி!

புதுடெல்லி (29 நவ 2020): நாளுக்கு நாள், நாட்டில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாலிவுட் நட்சத்திரம் டாப்சிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டிவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இட்டுள்ள பதிவில், “விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுக்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் குரலை செவி கொடுத்து கேட்க…

மேலும்...

விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – கிருஷ்ணபிரசாத் விளக்கம்!

புதுடெல்லி (28 நவ 2020): விவசாயிகள் போராட்டத்தின் அவசியம் குறித்தும் அது நாடு முழுக்க ஏற்படுத்தவுள்ள தாக்கம் குறித்தும் அகில இந்திய கிசான் சபா நிதி செயலாளர் கிருஷ்ணபிரசாத் விளக்கம் அளித்துள்ளார். வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்வதால் மத்திய அரசு செய்வதறியாது திணறி வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் மூன்றாம் நாளாக தீவிரமாக தொடர்ந்து வருகிறது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாஜக சங்க பரிவார் கேந்திரஸ் போராட்டத்திற்கு எதிராக…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தால் திணறும் மத்திய அரசு!

புதுடெல்லி (28 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்வதால் மத்திய அரசு செய்வதறியாது திணறி வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் மூன்றாம் நாளாக தீவிரமாக தொடர்ந்து வருகிறது. அரசு தீர்மானிக்கும் இடத்தில் போராடுவதால் எந்த பயனும் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலையிலேயே வேலைநிறுத்தம் தொடரும் என்றும் விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். இதனால் சிங்கூரில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க அதிகமான விவசாயிகள்…

மேலும்...

வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (27 நவ 2020): வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி-யில் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் மத்திய அரசு சட்டத்தை வாபஸ் பெறவில்லை. இதனை அடுத்து நேற்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஹரியானா எல்லையில் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாலத்தில் அமைக்கப்பட்ட போலீஸ் தடுப்புகளை ஆற்றில் வீசினர். இதற்கிடையே, எதிர்வரும்…

மேலும்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் கண்ணீர் புகை வீச்சு – தடுப்புகள் உடைப்பு!

புதுடெல்லி (26 நவ 2020): வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் ஹரியானா எல்லையில் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாலத்தில் அமைக்கப்பட்ட போலீஸ் தடுப்புகளை ஆற்றில் வீசினர். #WATCH Farmers' protest continues at Shambhu border, near Ambala (Haryana) as police stop them from proceeding to…

மேலும்...

நவம்பர் 30 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

புதுடெல்லி (06 நவ 2020): டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இந்நிலையில், நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். தடை விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதுபற்றி அமைச்சர்…

மேலும்...

தாமதிக்கப்பட்ட நீதி மிகப்பெரிய அநீதிதான்!!

தாமதமான நீதி கண்டிப்பாக நீதி மறுக்கப்பட்டதாக தான் எடுத்துக் கொள்ளமுடியும். CAA, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராடியதற்கு கைது செய்யப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவி (கர்ப்பிணி பெண்) சபூராவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. பொதுசமூகத்திற்கு இது ஆறுதலான செய்தி என்று சமூக செயல்பாட்டாளர்கள் பெருமூச்சுடன் இணையங்களில் எழுதுவதை கவனிக்கமுடிகிறது. இந்த விசயங்களில் முழு நீதி கிடைக்காவிட்டாலும், தாமதமாக ஆறுதலாக கிடைக்கப்பெற்ற ஜாமீனை நீதி கிடைக்கப்பெற்றது என்ற முறையில் இன்று பொதுசமூகத்தின் மத்தியில் பரப்புரை செய்யப்படுகிறது. என்ன செய்தார்…

மேலும்...

முதலில் நெகட்டிவ் தற்போது பாஸிட்டிவ் – அமைச்சரை தாக்கிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (17 ஜூன் 2020): டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் விட அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது. அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா…

மேலும்...

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி திடீர் நீக்கம்!

புதுடெல்லி (02 ஜூன் 2020): டெல்லி பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி டெல்லி பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மனோஜ் திவாரிக்கு பதிலாக, முன்னாள் வட டெல்லி மாநகராட்சி மேயரான ஆதேஷ் குப்தா டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ல் டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட மனோஜ் திவாரியின் செயல்பாடுகள்தான் , பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. அதேபோல சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைவராகவும்,…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில்…

மேலும்...