புலி வாலை பிடித்த கதையானது தமிழக காங்கிரஸின் நிலை!
சென்னை (16 ஜன 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் தற்போது தமிழக காங்கிரஸுக்கு புலிவாலை பிடித்த கதையாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில்…