புலி வாலை பிடித்த கதையானது தமிழக காங்கிரஸின் நிலை!

சென்னை (16 ஜன 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் தற்போது தமிழக காங்கிரஸுக்கு புலிவாலை பிடித்த கதையாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில்…

மேலும்...

சோவே பைத்தியம் என்று சொல்லிட்டார் (வீடியோ) – ரஜினியை கலாய்த்த திமுக எம்.பி!

சென்னை (16 ஜன 2020): துக்ளக் படித்தால் பைத்தியம் பிடிக்கும் என்று சோவே சொல்லும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திமுக எம் பி செந்தில்குமார். துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய ரஜினிகாந்த் “முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டப் பாதையிலிருந்து தடம் மாறுகிறதா திமுக?

CAA NRC விசயத்தில் தி.மு.க.வின் சமீபத்திய நகர்வுகள், அந்தக் கட்சி எந்த திசையை நோக்கி நகர்கிறது என்கிற கேள்வியை எழுப்ப வைக்கிறது. ஹலோ எஃப்.எம்.மில் துரைமுருகன் வெளிப்படுத்திய கருத்து; சட்டசபையில் “இந்திய முஸ்லிம்களுக்கு சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பில்லை” என்று சொல்லியது; காங்கிரஸ் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது என மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பதிலிருந்து, தி.மு.க. விலகிச் செல்வதைக் காண முடிகிறது. தந்தைப் பெரியாரோடு களம் கண்டு, தனது சமூகநீதிச் செயல்பாடுகளால் சமத்துவப்…

மேலும்...

திமுக காங்கிரஸ் விரிசல் – துரை முருகன் பரபரப்பு தகவல்!

வேலூர் (15 ஜன 2020): திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகினால் அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் காட்பாடியில், பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்,“தி.மு.க ஆட்சியில் கிராமந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதனை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததைப்போல் படம் எடுத்துக்கொள்கிறார்கள். குளங்களைத் தூர்வாருவதாக சொன்னார்கள். அதன்பிறகு, விவசாயிகள் ஏரி மண்ணை எடுத்துக்கொள்ளலாம்…

மேலும்...

தமிழக காங்கிரஸுக்கு சோனியா காந்தி எச்சரிக்கை – பல்டி அடித்த கே.எஸ்.அழகிரி!

சென்னை (14 ஜன 2020): தமிழக காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் சோனியா காந்தி எரிச்சல் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் திமுகவை கடுமையாக சாடியிருந்தனர். இவ்விவகாரம் டெல்லியில் பெருமளவில் பிரதிபலித்தது. இதனாலேயே குடியுரிமை சட்டம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று டெல்லியில் இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்…

மேலும்...

திமுக காங்கிரஸ் இடையே விரிசல் – டெல்லியில் பிரதிபலிப்பு!

சென்னை (14 ஜன 2020): திமுக மீது குற்றம் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுக தலைமை ரொம்பவே அப்செட்டாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்தது. இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ்…

மேலும்...

தேர்தல் முடிவுகள் – அதிர்ச்சியில் திமுக!

புதுக்கோட்டை (11 ஜன 2020): மறைமுக தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியில் திமுக தோல்வியடைந்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது. மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர் விவரங்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை…

மேலும்...

திமுகவுக்கு எதிராக கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்கள் – முறிகிறதா கூட்டணி?

சென்னை (11 ஜன 2020): திமுக கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டதாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இன்றி மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீா்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த…

மேலும்...

ஆளுநர் உரை கிழிக்கிற உரைதான் – கொந்தளித்த ஜெ.அன்பழகன்!

சென்னை (07 ஜன 2020): சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்,” சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக சார்பில் நான் கலந்து கொண்டேன். நான் பேசும்போது திட்டமிட்டு என்னை பேசவிடாமல் அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் அத்துனை பேரும் குறுக்கீடு செய்தனர். நான் பேசக்கூடாது எனது கருத்து இந்த அவையிலே இடம்பெறக்கூடாது என்பதில் அனைவரும் அக்கறையோடு இருந்தார்கள். உள்ளாட்சித்…

மேலும்...

தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

சென்னை (05 ஜன 2020): ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 8 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு திராவிட…

மேலும்...