கலவரக் களமான வெள்ளை மாளிகை – டிரம்புக்கு எதிராக பேஸ்புக் ட்வீட்டர் நடவடிக்கை!

வாஷிங்டன் (07 ஜன 2021): அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது….

மேலும்...

அமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன் (04 நவ 2020): அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் செல்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 கைப்பற்றியுள்ளார். டெக்சாஸ், வட கரோலினா, ஓஹியோ மற்றும் பென்சில்வேனியா மாநிலங்கள் தேர்தல் முடிவுகளின் மாற்றும் வகையை கொண்டுள்ளன, டொனால்டு டிரம்ப் அவை அனைத்தையும் வெல்ல வேண்டும்,…

மேலும்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை!

 அமெரிக்க  ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 209 வாக்குகளும், டிரம்ப் 118…

மேலும்...

டொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

வாஷிங்டன் (28 ஜூலை 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்பு ஓ’பிரையன் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வீட்டில் இருந்தபடியே கவனித்து வருகிறார். ஓ’பிரையன் சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து திரும்பினார், இங்கிலாந்து,…

மேலும்...

ட்ரம்பின் முகத்திரையை கிழிக்கும் புத்தகம் – அமெரிக்க அரசு அவசர தடை!

வாஷிங்டன் (22 ஜூன் 2020): வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் மேதையான ஜான் போல்டன் The Room Where it Happened” எனும் பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஜூன் 23- ஆம் தேதி இந்த புத்தகம் வெளியாக இருந்த நிலையில் நேற்று அந்த புத்தகத்திற்கு அமெரிக்க அரசு திடீரென தடை விதித்தது. அரசின் முக்கிய பதவியில் இருந்தவர் எழுதிய புத்தகம் என்பதால் அதனை தணிக்கை செய்த பின்னரே வெளியிட முடியுமென காரணமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறு தேர்தலில்…

மேலும்...

பதுங்குக் குழியில் டொனால்ட் டரம்ப் – அமெரிக்காவில் அதிகரிக்கும் பதற்றம்!

வாஷிங்டன் (01 ஜூன் 2020): வெள்ளை மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் மாளிகையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவர்களைத்…

மேலும்...

அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்!

வாஷிங்டன் (30 மே 2020): உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க நடைபெறும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக, ஐ.நா சபையின் கிளை அமைப்பாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் உலக சுகாதார நிறுவனம். சுமார் 194 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகத் தற்போது வரை இருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக…

மேலும்...

ட்ரம்பின் சமாதான முயற்சியை ஏற்க சீனா மறுப்பு!

புதுடெல்லி (29 மே 2020): எல்லைப் பிரச்சினைகள் குறித்த பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த வாய்ப்பை சீனா நிராகரித்துள்ளது. முன்னதாக இந்தியா – சீனா எல்லை பிரச்னையில் அமெரிக்கா நடுவராகவோ அல்லது தூதராகவோ இருந்து இரு நாடுகளுக்கும் உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில்…

மேலும்...

மருத்துவர்களின் அறிவுரையை மீறும் டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் (22 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை தொடர்ந்து அவர் மறுத்து வருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பிரச்சாரங்களில் பங்கேற்று வரும் ட்ரம்ப், தொடக்கத்திலிருந்தே கை குலுக்குவது போன்ற செயல்களில் மருத்துவர்களின் அறிவுரைகளை மீறி செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், மிச்சிகனில் செயல்படும் ஃபோர்ட் நிறுவனத்தில் முகக்கசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பதிசெய்யப்படும் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், முகக்கசம்…

மேலும்...

கொரோனா ரணகளத்திலும் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் அக்கப்போர்!

வாஷிங்டன் (21 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது அமெரிக் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இம்மருந்தை பரிந்துரைக்கின்றன. இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியாவை மிரட்டி, லட்சக்கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா…

மேலும்...