கும்பகோணத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மாசிமக பக்தர்களுக்கு அன்னதானம்!

கும்பகோணம் (06 மார்ச் 2023): கும்பகோணத்தில் மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இன்று 6 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு பகுதியில் கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாசிமகம் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பக்தர்களுக்கு, கிஸ்வா அமைப்பு சார்பில் எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் தாசம், குடிதண்ணீர் பாட்டில்கள் என வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள்…

மேலும்...

ஒரே வேளைக்கு 18 பேர் உணவு சாப்பிட்ட தொகை ரூ.1 கோடியே 40 லட்சம்

துபாய் (03 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புத்தாண்டு தினத்தன்று 18 பேர் கொண்ட ஒரு குழு உணவுக்காக 620,926.61 திர்ஹம்களை (இந்திய ரூபாயில் ரூ.1 கோடியே 40 லட்சம்) செலவழித்துள்ளது. இந்தத் தொகையை பில் செய்த உணவகத்தின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்துள்ளார். துபாயில் உள்ள Gall Restaurant, 18 விருந்தினர்களுக்கு இவ்வளவு பெரிய கட்டணத்திற்கான உணவை வழங்கியுள்ளது. உணவகத்தின் உரிமையாளர் மெர்ட் டர்க்மென் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பில்லின் படத்தை வெளியிட்டுள்ளார்….

மேலும்...

உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா!

புதுடெல்லி (26 டிச 2022): உலகின் சிறந்த உணவுகளில் தர வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் உலகளாவிய பட்டியலில், இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. தேவையான பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தரவரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. ஜப்பானிய உணவு வகைகள் நான்காவது இடத்தில் உள்ளன. டேஸ்ட்அட்லஸ் விருதுகள்…

மேலும்...
Supreme court of India

நாட்டில் யாரும் உணவின்றி உறங்கக்கூடாது – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (07 டிச 2022): நாட்டில் யாரும் உணவின்றி வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது என்பதே நமது கலாச்சாரம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் கடைசி நபருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலை மற்றும் நிதிப் பாதுகாப்பை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா…

மேலும்...

சுய ஊரடங்கு கடைபிடிக்கும் நாளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தமுமுக!

சென்னை (22 மார்ச் 2020): சுய ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்கும் மக்களில் ஆதரவற்றவர்ளுக்கும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கும் தமுமுகவினர் உணவு வழங்கி ஆதரவளித்தனர். உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைய உள்ளது….

மேலும்...