மூடப்படுகின்றன ஜிமெயில் கணக்குகள்! என்ன செய்தால் காப்பாற்றலாம்?

வாஷிங்டன் (10 நவம்பர் 2023): மில்லியன் கணக்கான ஜிமெயில் கணக்குகளை அடுத்துவரும் நாட்களில் டெலிட் செய்து நீக்கப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் இயங்குதளத்திற்கான முக்கிய அப்டேட்டின் ஒரு பகுதியாக, இந்த நீக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லாகின் செய்யப்படாத ஜிமெயில் முகவரிகளின் பயனர்களின் பாஸ்வேர்டுகள் ஹாக்கர்களுக்கு கசிந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இத்தகைய கணக்குகள் தற்போது ஆபத்தில் இருப்பதாகவும் ஜிமெயில் தெரிவித்துள்ளது. இன்று (10 நவம்பர் 2023) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஹாக்கர்களின்…

மேலும்...

கூகுள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

புதுடெல்லி (14 டிச 2021): மத்திய தொலைத்தொடர்புத்துறையின் ஒரு பகுதியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் கூகுள் குரோம் பயனாளர்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, கூகுள் குரோமில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன எனவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை அவர்களால் எளிதில் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சிக்கல்களை சரிசெய்ய…

மேலும்...

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கூகிள் புதிய கொள்கை!

புதுடெல்லி (11 ஆக 2021): 18 வயதிற்குட்பட இளம் பயனர்களுக்கு இணையத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற கூகுள் தனது கொள்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. தேடல் நிறுவனமான கூகிள்18 வயதிற்குட்பட்ட பயனர்களை கூகிள் தேடல் முடிவுகளிலிருந்து தங்கள் படங்களை அகற்றக் கோரும். விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்ய முடியாவிட்டால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்கள் சார்பாக கூகிளை கோரலாம்.இது விரைவில் அறிமுகபப்டுத்தப்படும் என்று கூகிள் கூறியுள்ளது. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கூகுளில் கணக்கை உருவாக்க…

மேலும்...

கூகுளுக்கு இந்திய செய்தி நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை!

புதுடெல்லி (26 பிப் 2021): செய்தி நிறுவனங்களுக்கான விளம்பர வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ஊடகங்கள் சார்பில் கூகுளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள்களின் உண்மையான உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் கூகிள் தனது நம்பகத்தன்மையை இந்தியாவில் நிறுவியுள்ளது என்றும் அதற்கேற்ப செய்தித்தாள்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய செய்தித்தாள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து ஐ.என்.எஸ் கூகிளுக்கு எழுதியுள்ள கதிதத்தில், கூகிள் இந்திய செய்திகளின் உள்ளடக்கத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கணிசமான நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது,…

மேலும்...

உங்கள் ஸ்மார்ட் போன்களில் இந்த ஆப்கள்(APP) இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள் – கூகுள் எச்சரிக்கை!

புதுடெல்லி (07 பிப் 2020): பயனர்களின் ரகசிய தகவல்களை சேகரித்து சீனாவில் உள்ள சர்வர்களுக்கு (சேவையகங்களுக்கு) அனுப்பும் மால்வேரை கொண்டிருப்பதாக கூறி மொத்தம் 24 ஆப்கள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் பிறப்பித்துள்ள எச்சரிக்கை பதிவில், வி.பி.என் ப்ரோவின் வலைப்பதிவு இடுகையின் படி, டி.சி.எல் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக 382 மில்லியன்களுக்கும் மேலான ஒட்டுமொத்த பதிவிறக்கங்களை சந்தித்த 24 ஆப்களை…

மேலும்...