டெல்லி போர்க்களத்தில் கைவிடப்பட்ட இந்து மணப் பெண்ணுக்கு கை கொடுத்த முஸ்லிம் இளைஞர்!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி வன்முறையின் நடுவே மணமகனால் கை விடப்பட்ட இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் முன்வந்து திருமணம் செய்துள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் நுழைந்ததால் டெல்லி கலவர பூமியானது. இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள சாவித்ரி பிரசாத் (23) என்ற பெண்ணுக்கும் மற்றொரு இந்து இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்து முறைப்படி செவ்வாய் அன்று…

மேலும்...

முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்!

காசர்கோடு (18 பிப் 2020): கேரளாவில் முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். கேரளாவின் காசர்கோடு பகுதியில் வசித்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணின் பெற்றோர் சிறு வயதிலேயே மரணம் அடைந்து விட்டனர். அனாதையாக இருந்த ராஜேஸ்வரியை, அப்துல்லா, கதீஜா தம்பதிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அப்துல்லா, கதீஜா தம்பதிகள் விஷ்ணு பிரசாத் என்பவருக்கு கேரளாவின் காசர்கோடு பகவதி கோவிலில் வைத்து…

மேலும்...

தொடரும் தீண்டாமை கொடுமை – 430 க்கும் அதிகமான தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர்!

கோவை (12 பிப் 2020): தொடரும் தீண்டாமை கொடுமை காரணமாக கோவையில் 430க்கும் அதிகமான தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் தீண்டாமை சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இறந்த அனைவரும்…

மேலும்...

இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

மும்பை (10 பிப் 2020): முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமம் ஒன்றில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ள இஸ்லாக் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ள இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்த கிராமத்தில். கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு…

மேலும்...

இந்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை (02 பிப் 2020): “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெஞ்சு முழுவதும் வன்மம் குடியிருக்கிறது!” என்று திமுக தலைவர ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் செய்தி சேனலில் நேர்காணல் ஒன்றில் பேசிய அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது! தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இஸ்லாமிய அமைப்புகள் சில செயல்படுகின்றன!” என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்…

மேலும்...

நான் முஸ்லிம், என் மனைவி இந்து, என் பிள்ளைகள்? -நடிகர் ஷாருக்கான் பதில்!

மும்பை (26 ஜன 2020): என் வீட்டில் இதுவரை எங்கள் மதம் குறித்து விவாதித்ததே இல்லை என்று நடிகரி ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குடியரசு தின தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார். அப்போது “நான் முஸ்லிம் மதத்தவன் என் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவள், என் பிள்ளைகள் பள்ளிச் சான்றிதழில் என்ன மதம் குறிப்பிட வேண்டும் என்று கேட்டபோது இந்தியன் என்று குறிப்பிடச் சொன்னேன்”…

மேலும்...

சமூக நல்லிணத்திற்கு ஒரு சான்று – மாங்கல்ய ஓசையுடன் மசூதியில் நடந்த இந்து திருமணம்!

காயங்குளம் (19 ஜன 2020): கேரள மாநிலம் காயங்குளத்தில் ஜும்மா மசூதியில் இந்து திருமணம் நடைபெற்று சமூக நல்லிணக்கத்திற்கு மேலும்  ஒரு சான்றாக அமைந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சோராவள்ளி கிராமத்தில் உள்ள அசோகன் – சிந்து தம்பதிகள் மகள் அஞ்சு. அசோகன் இரண்டு வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார். இதனால் சிந்து குடும்பம் கடும் சிரமத்தில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் அஞ்சுவுகும் சரத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. மகளின் திருமணத்திற்காக, அருகில் இருந்த முஸ்லிம்…

மேலும்...