ஈரான் விமான விபத்தில் பயணிகள் அனைவரும் பலி!

தெஹ்ரான் (08 ஜன 2020): உக்ரேன் விமான விபத்தில் பயணம் மேற்கொண்ட 176 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பயணிகளும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்...

ஈரான் அமெரிக்கா போர் பதற்றம் – இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி (08 ஜன 2020): ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியர்களுக்கும், இந்திய விமான நிறுவனங்களுக்கும் இந்திய அரசு அறிவுறுத்தல் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள், ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் வான் வழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஈராக்கில் வசிப்போர் அந்நாட்டுக்குள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஈராக் நாட்டுக்குச் செல்வதை இந்தியர்கள்…

மேலும்...

ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

ஈரான் (08 ஜன 2020): ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. 180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம், இரானின் தெஹ்ரானுக்கு அருகில் விழுந்து நொறுங்கியுள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாக வில்லை.

மேலும்...

அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் (08 ஜன 2020): இராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதலை பென்டகன் உறுதி செய்துள்ளது. இராக்கின் அமெரிக்க துருப்புகள் மீது, ஏராளமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுதவிர வேறு எந்த சேத விவரங்களையும் பென்டகன் தெரிவிக்கவில்லை.

மேலும்...