திமுக ஆதரவில் நடக்கிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (05 நவ 2022): ஒபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் எல்லாம் திமுகவின் ஆதரவில்தான் நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இதற்கு முன் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். இதன் பின் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்றார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவை தான் குற்றம் சொல்லுகிறது. அதேபோல ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டார். அதனால் தர்மயுத்தம் 2.0 என்பது ஒரு கர்ம யுத்தம்….

மேலும்...

சட்டத்திற்கு விரோதமான செயலை தடுத்தேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (12 மார்ச் 2022): ஜாமினில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி மீது ஓ.பி.எஸ் பாய்ச்சல்!

சென்னை (28 பிப் 2022): என்னை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளின் போது, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 24-ந் தேதி சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பிற்கு ஓ.பி.எஸ்சை அழைத்துச் செல்லவில்லை. ஓ.பி.எஸ்சிடம் சொல்ல கூட இல்லை எடப்பாடி. இத்தனைக்கும், ஓ.பி.எஸ். கேட்டும் ஜெயக்குமாரைச் சந்திக்க செல்வது பற்றி மூச்சு விடவில்லை இ.பி.எஸ். இந்த நிலையில், ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும்…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை (22 பிப் 2022): திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 7 ஆம் தேதி வரை சிறையிலடைக்கநீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற திமுக தொண்டரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அரை நிர்வாணமாக்கித் தாக்கியதாக, தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்…

மேலும்...

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது!

சென்னை (21 பிப் 2022): முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்படுள்ளார். தமிழகத்தில் கடந்த பிப் 19 ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…

மேலும்...

நூறு வருஷம் வாழ அமைச்சர் சொல்லும் அடடே தகவல்!

சென்னை (12 மார்ச் 2020): மீன் சாப்பிட்டால் நூறு வருஷம் வாழலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என்பது வெறும் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். மதுரையில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு…

மேலும்...

ரஜினியும் கமலும் இணைய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

புதுடெல்லி (02 மார்ச் 2020): நடிகர் ரஜினியும் கமலும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்ளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம் ரஜினி – கமல் இணைந்தால் 16…

மேலும்...

உண்மை ஒருநாள் வெளியே வரும் – ஊடகங்கள் மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (07 பிப் 2020): ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் தி.மு.க சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் இளைய அருணா இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின் ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது: “ஒருகாலத்தில் வைதீக திருமணங்களை நடத்தி வைப்பதற்கு புரோகிதர்களை தேடி அலையும் நிலை இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாகி சீர்திருத்தத் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இப்போதெல்லாம்…

மேலும்...

பொறுத்தது போதும் – பொங்கி எழுந்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (19 ஜன 2020): சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.4,073 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். பாஜகவை கொஞ்சம் கூட எதிர்த்து பேசாமல் இருந்து வந்த அதிமுகவினர் தற்போது எதிர்க்க தொடங்கியுள்ளனர். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாஜகவின் நட்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக உள்ளுரில் வாழும் அனைத்து…

மேலும்...

பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பொங்கிய ஜெயக்குமார்!

சென்னை (15 ஜன 2020): பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது, இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று…

மேலும்...