விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் அவரசர மனு!

புதுடெல்லி (10 பிப் 2022): ஹிஜாப் தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றுவதற்கான மனுவை பட்டியலிட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்துள்ளார். இதனை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்த உத்தரவில், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கைப்பற்றியுள்ளதாகவும், விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது. வழக்கை மாற்றக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கும் கோரி,…

மேலும்...

அஹமது படேல் இல்லாத காங்கிரசை நினைத்துப்பார்க்க முடியவில்லை – கபில் சிபல் உருக்கம்!

புதுடெல்லி (25 நவ 2020): அஹமது படேல் இல்லாமல் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது? என்று தெரியவில்லை என அஹமது படேலின் நண்பரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவிட் பாதிப்பால் காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான கபில் சிபல் முதல் நபராக படேல் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது…

மேலும்...
Kapil Sibal

காங்கிரஸ் மீது கபில் சிபல் நேரடி பாய்ச்சல்!

புதுடெல்லி (16 நவ 2020): பாஜகவை சமாளிக்க காங்கிரசுக்கு தெரியவில்லை என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாழிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவிக்கையில், தொடர்ச்சியான தோல்விகள் மேலும் தோல்விக்கே வழிவகுக்கும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸால் ஒரு வலுவான மாற்றத்தை செய்ய இயலவில்லை, என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். பீகார் தோல்வியை சுட்டிக் காட்டி பேசியுள்ள கபில் சிபல், பீகாரில் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் காங்கிரஸால் பாஜகவை வெல்ல முடியும் என்று தெரியவில்லை . கட்சி…

மேலும்...

அர்னாபுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சித்திக் காப்பானுக்கு இல்லை – கபில் சிபல் காரசார வாதம்!

புதுடெல்லி (11 நவ 2020): அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மீதான விசாரணையின்போது, மலையாள பத்திரிகையாளர் சித்திக் காப்பானின் விடுதலைதான் மிக முக்கியமானது, அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் முக்கியமல்ல என்று கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். ஹத்ராஸ் சம்பவத்தை கவரேஜ் செய்ய சென்ற மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பனை உ.பி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது விடுதலை மீதான விசாரனை மனுவை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அர்னாபின் மீதான ஜாமீன் மனு உடனடி…

மேலும்...

அரசுத் தரப்பிலிருந்து வருவது 4 லட்சம் கோடி மட்டுமே – கபில் சிபல் பகீர் தகவல்!

புதுடெல்லி (14 மே 2020): நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் தொகையில், அரசிடம் இருந்து வரும் தொகை 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அரசிடமிருந்து வரும் உண்மையான நிவாரணத் தொகை 4…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம்: நேருக்கு நேர் விவாதிக்க தயார் – அமித்ஷாவுக்கு உவைசி சவால்!

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க நானும் தயாராக உள்ளேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து…

மேலும்...

சவாலை ஏற்க தயார் – மோடி அமித் ஷாவுக்கு கபில் சிபல் அறைகூவல்!

புதுடெல்லி (21 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு கபில் சிபல் அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும்…

மேலும்...

குடியுரிமைச் சட்ட திருத்தம் குறித்து கபில் சிபல் அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அமுல்படுத்த முடியாதவாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அதிர்ச்சிக் கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கேரளாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய கபில் சிபல் “சிஏஏ நிறைவேற்றப் பட்டுவிட்டால், அதை என்னால் அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் சொல்ல முடியாது. அது சாத்தியமல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு…

மேலும்...