தலித் வீட்டில் முதல்வர் திடீர் விசிட் – பிராண்டட் டீதான் வேண்டும்- பகீர் கிளப்பும் வீடியோ!

பெங்களூரு (14 அக் 2022): தலித் சமூகத்தை சேர்ந்தவர் வீட்டில் பிராண்டட் டீதான் வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர் பொம்மை, முன்னாள் முதலர் எடியூரப்பா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் மற்றும் பாஜக தலைவர்கள் விஜயநகர மாவட்டம் கமலாபுராவில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை காலை சென்றனர். அங்கு காலை உணவையும் சாப்பிட்டனர். பின்னர்,…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இரு மாறுபட்ட தீர்ப்பு!

புதுடெல்லி (13 அக் 2022): கர்நாடக அரசின் ஹிஜாப் தடை குறித்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனால் கர்நாடக நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை…

மேலும்...

முஸ்லிம் மதரஸாவில் நுழைந்து பூஜை நடத்திய இந்துத்துவா கும்பல் -வீடியோ!

பெங்களூரு (07 அக் 2022): கர்நாடக மாநிலம் பிதாரில் தசரா கொண்டாட்டத்தின் போது வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூத் கவான் மதரஸா வளாகத்திற்குள் புகுந்த இந்துத்துவா கும்பல் பூஜை நடத்தியுள்ளது. 1460 களில் கட்டப்பட்ட இந்த மதரஸா இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் மதரஸாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த மதரஸாவில் நுழைந்த கும்பல் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில்…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டது தவறு – உச்ச நீதிமன்ற நீதிபதி!

புதுடெல்லி (20 செப் 2022): கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதாம்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் அத்தியாவசிய மதப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சென்றிருக்கக் கூடாது என்று நீதிபதி துலியா தெரிவித்தார்….

மேலும்...

கேள்விக்குறியாகும் முஸ்லிம் மாணவிகளின் கல்வி – பியுசிஎல் கவலை!

பெங்களூரு (10 செப் 2022): கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் மாநில அரசின் நடவடிக்கையாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாலும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பான, ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்’ கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியூசிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் உத்தரவும், அதனை வழிமொழிந்துள்ள நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்ற தீர்ப்பு, பாரபட்சமற்ற கல்வி உரிமை, சமத்துவ உரிமை,…

மேலும்...

முஸ்லிம்கள்தான் எங்களுக்கு உதவினார்கள் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மக்கள்!

பெங்களூரு (10 செப் 2022): கர்நாடகாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியபோது, ​​தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்நகருக்கு அரசு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை. அங்கு களத்தில் இறங்கிய முஸ்லீம் தன்னார்வலர்கள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுடன் உதவி வருகின்றனர். அங்குள்ள மக்கள் நாங்கள் ஒட்டுப் போட்ட தலைவர்கள் இறந்துவிட்டோமா அல்லது உயிருடன் இருக்கிறோமா என்று…

மேலும்...

ருத்ராட்சம் மற்றும் சிலுவையுடன் ஹிஜாபை ஒப்பிட முடியாது – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (08 செப் 2022): ருத்ராக்ஷம் மற்றும் சிலுவையை ஹிஜாபுடன் ஒப்பிட முடியாது ஏனெனில் அவை சட்டைக்குள் அணிந்திருப்பதால் மற்றவர்களுக்குத் தெரிவதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனல் கர்நாடக அரசின் உத்தரவை தடை செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில்…

மேலும்...

மினி மற்றும் மிடியுடன் மாணவிகள் பள்ளிக்கு வரலாமா? – ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை!

புதுடெல்லி (05 செப் 2022): கல்வி நிறுவனங்களுக்கு மாணவிகள் மினி அல்லது மிடி அணிந்து வர அனுமதிக்கலாமா? என்று ஹிஜாப் குறித்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடகா மாநில பாஜக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முந்தைய…

மேலும்...

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடம் – சாமியார் தற்கொலை!

பெங்களூரு (05 செப் 2022): கர்நாடகாவில் சித்ரதுர்கா முருகா மடத் துறவி சம்பந்தப்பட்ட பாலியல் ஆடியோ ஒன்று வைரலான நிலையில் குரு மடிவாலேஸ்வரா மடத்தின் பூடாதிபதி பசவ சித்தலிங்க சுவாமிகள் அவரது ரூமில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சித்ரதுர்கா மடத்தில் பெண்களும், சிறுமிகளும் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என்பது குறித்து இரு பெண்களுக்கு இடையே நடந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விவாதத்தில் பசவ சித்தலிங்க சுவாமிஜியின் பெயரை இரண்டு…

மேலும்...

முஹம்மது பாசில் கொலை வழக்கில் 4 பேர் கைது!

பெங்களூரு (02 ஆக 2022): கர்நாடகாவில் முகமது பாசில் கொலை வழக்கை விசாரித்த கர்நாடக போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உத்தர கன்னடா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல் நகரில் ஜூலை 28ஆம் தேதி ஃபாசில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பாஜக யுவ மோர்ச்சா…

மேலும்...