சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய தடை – கர்நாடக அரசு உத்தரவு!

பெங்களூரு (17 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தடை மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்து சிறுபான்மை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுபான்மை நலன், ஹஜ் மற்றும் வக்ஃப் துறை செயலாளர் மேஜர் பி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு உத்தரவு சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் மௌலானா ஆசாத் மாதிரிப் பள்ளிகளுக்கும் (ஆங்கில மீடியம்) பொருந்தும். ) சில சிறுபான்மை நிறுவனங்களில்…

மேலும்...

கர்நாடகாவை அடுத்து ஆந்திராவிலும் ஹிஜாப் தடை!

விஜயவாடா (17 பிப் 2022): விஜயவாடாவில் அமைந்துள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்புகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சினையை தாங்கள் எதிர்கொண்டதில்லை என்றும், தங்களது அடையாள அட்டைகளில் கூட புர்காவுடன் புகைப்படங்கள் இருப்பதாகவும் விஜயவாடா மாணவிகள் தெரிவித்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண பெற்றோர்கள், சமூக பெரியவர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினரிடம் பேசி வருகின்றனர். சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – 30 மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளிநடப்பு!

பெங்களூரு (16 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஷிவமோகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 30 மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளிநடப்பு செய்தனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு நாடெங்கும் விவாத பொருளாகியுள்ளது. இந்திய அரசின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவின்படி முக்காட்டை கழற்றுமாறு…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்புக்கு இந்தியா பதில்!

புதுடெல்லி (16 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பில்…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவான மனுதாரர்களின் தனிப்பட்ட விவரங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக!

பெங்களூரு (15 பிப் 2022): ஹிஜாபுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ள மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிட்டு அசிங்கமான செயலை செய்துள்ளது கர்நாடக பாஜக. ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இதில் ஹிஜாபை அனுமதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் ஐந்து பேரின் முகவரிகள் அடங்கிய தனிப்பட்ட விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக பிரிவு இணையத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் வீட்டு முகவரிகள் கர்நாடக பாஜக ட்விட்டர் பக்கத்தில்…

மேலும்...

ஹிஜாபை கழற்ற மாட்டோம் – பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி சென்ற மாணவிகள்!

பெங்களூரு (15 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான விவாதம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவிகள் தலை தாவணியை (ஹிஜாபை) கழற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் சிலர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிவதில் உறுதியாக இருப்பதால் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகளை கல்லூரி அதிகாரிகள் திருப்பி…

மேலும்...

மத்திய பிரதேசத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி!

போபால் (15 பிப் 2022): கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் தடை விவகாரம் தற்போது மத்திய பிரதேசத்திற்கும் பரவியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி முதுநிலை கல்லூரி திங்கள்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் மாணவர்கள் ‘மதம் சார்ந்த’ உடைகள் அணிவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிந்திருந்த இரு மாணவிகளுக்கு எதிராக காவி சால்வை அணிந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கல்லூரி…

மேலும்...

இந்தியாவின் ஹிஜாப் விவகாரத்திற்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம்!

புதுடெல்லி (15 பிப் 2022): இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் முஸ்லிம் பெண்களை துன்புறுத்தும் சம்பவங்கள் குறித்தும், கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான…

மேலும்...

பள்ளி மாணவியின் ஹிஜாபை கழற்ற சொன்னதால் பரபரப்பு – VIDEO

மாண்டியா (14 பிப் 2022): மாண்டியாவில் உள்ள ரோட்டரி எஜுகேஷனல் சொசைட்டி பள்ளி மாணவர்கள், பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாபை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கர்நாடகாவில் பள்ளிகள் பிப்ரவரி 10 அன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி, கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யும் அரசின் உத்தரவை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில்…

மேலும்...

முஸ்லிம் பெண்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை!

புதுடெல்லி (14 பிப் 2022): ஹிஜாப் குறித்த தவறான எண்ணத்தை நீக்கும் கருத்துகளை அனைவருக்கும் பரப்புங்கள் என்று முஸ்லிம் பெண்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்நிலையில் சமூக ஊடக அமர்வு ஒன்றில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பொதுச் செயலாளர் மௌலானா உம்ரைன் மஹ்ஃபூஸ் ரஹ்மானி…

மேலும்...