மக்கா கிரேன் விபத்து – பின்லேடன் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஜித்தா (15 பிப் 2023) மக்காவில் கிரேன் விழுந்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பின்லேடனின் கட்டுமான நிறுவனத்திற்கு 20 மில்லியன் ரியால் அபராதம் விதித்து மக்கா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மக்கா குற்றவியல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது. முன்னதாக பின்லேடன் நிறுவனத்தை இந்த வழக்கிலிருந்து விடுவித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு கிரேன் விபத்தில்…

மேலும்...

சமூக ஊடகங்களில் கண்காணிப்பை கடுமையாக்கும் சவுதி அரேபியா!

ஜித்தா (23 ஜன 2023): “சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்” என்று பொதுப் பாதுகாப்புத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-பஸ்ஸாமி தெரிவித்துள்ளார். 22வது ஹஜ் உம்ரா ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய முகமது அல்-பஸ்ஸாமி கூறுகையில், “சவூதி அரேபியாவில் குற்றவாளிகள் வாகனங்களில் பயணித்தால் அவர்களை பிடிக்கும் புதிய முறை விரைவில் அமல்படுத்தப்படும். குலுனா அமீன் இயங்குதள மேம்படுத்தல் நடந்து வருகிறது. குற்றவாளிகள் பற்றிய அனைத்து தகவல்களும் தகவல் தருபவர்களால் அந்த இயங்குதளத்தில் புதுப்பிக்கப்படும். மக்காவில்,…

மேலும்...

ஜித்தா விமான நிலையத்திலிருந்து மக்கா ஹரம் ஷரீஃபிற்கு இலவச பேருந்து சேவை!

ஜித்தா (13 ஜன 2023): ஜித்தா விமான நிலையத்திலிருந்து மக்கா மஸ்ஜிதுல் ஹராமுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் முதல் எண் டெர்மினலில் இருந்து மக்கா ஹரமிற்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலவச பேருந்து சேவை உம்ரா மற்றும் ஹஜ்ஜிற்காக இஹ்ராமில் வரும் யாத்ரீகர்களுக்கு மட்டுமே இருக்கும் என்று கிங் அப்துல் அசீஸ் ஏர்போர்ட் நிர்வாகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதேபோல சவூதிக்கு வெளியிலிருந்து வரும்…

மேலும்...

புனித மக்கா குறித்து பரவும் போலி வீடியோ!

ஜித்தா (02 ஜன 2023): மக்காவின் புனித ஹராமில் பனிப்பொழிவுடன் மழை பெய்யும் போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவில் மழை பெய்து வருகிறது. அதேவேளை இவ்வாறு பெய்து வரும் மழைக்கு வீடியோ எஃபெக்ட்ஸ் சேர்க்கப்பட்டு மக்காவையம் இணைத்து போலியாக பரப்பபட்டு வருகிறது, “பனி பொழிவது போல் வீடியோவில் உள்ளது அவ்வாறு எதுவும் இல்லை வீடியோ போலியானது” என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்…

மேலும்...

மக்கா – மதீனா ஹரமைன் ரெயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜித்தா (13 டிச 2021): மக்கா மற்றும் மதீனாவிற்கு இடையேயான ஹரமைன் அதிவேக இரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹரமைன் அதிவேக இரயில் சேவையில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், தினமும் கூடுதலாக 16 சேவைகள் இயக்கப்படும் என்று இரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரமைன் இரயில் சேவை மக்கா, ஜித்தா, ராபிக் மற்றும் மதீனா ஆகியவற்றிற்கு உண்டு. இதற்கிடையே ஜித்தாவின் சுலைமானியா நிலையத்திலிருந்து மக்காவிற்கு மேலும் எட்டு தினசரி சேவைகளும், மதீனாவிற்கு…

மேலும்...

புனித ரமலானில் மக்கா மற்றும் மதினா பெரிய மசூதிகளில் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள்!

ஜித்தா (29 மார்ச் 2021): உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடர்வதால் இவ்வருட ரமலானில் புனித மக்கா மற்றும் மதினாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இரண்டு புனித மசூதிகளின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதாய்ஸ் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இப்தார் (நோன்பு திறப்புக்காக) விரிப்பு விரித்து ஒன்றாக நோன்பு திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. , இஃதிகாஃப் (வழிபாட்டுக்காக ஒரு மசூதியில் தங்கியிருக்கும் நடைமுறை) இரு மசூதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு…

மேலும்...

புனித மக்காவில் உம்ரா யாத்திரைக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி!

மக்கா (02 அக் 2020): வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மக்காவிற்கு உம்ரா யாத்திரீகர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற மக்கா தலத்திற்கு யாத்ரீகர்கள் வரத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக இந்த தடை அமலில் இருந்து வரும் நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறது. மூன்று கட்டங்களாக யாத்ரீகர்களுக்கு தடை விலக்கப்படவிருக்கிறது. முதல் கட்டமாக சவுதி அரேபிய குடிமக்கள்…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் சவூதிக்கு வருகை புரிய தற்காலிக தடை!

மக்கா (27 பிப் 2020): உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது சவூதி அரசு. இதுகுறித்து சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உம்ரா மற்றும் சுற்றுலா விசாவில் சவூதி வருபவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே இந்தியாவிலிருந்து வரும் தகவல்படி, பல உம்ரா யாத்ரீகர்கள் இந்திய…

மேலும்...

பிரபல தமிழ் நடிகர் இயக்குநர் ராஜ்கபூரின் மகன் மெக்காவில் மரணம்!

மெக்கா (17 பிப் 2020): பிரபல நடிகர் இயக்குநர் மகன் ஷாருக் கபூர் (23) மெக்காவில் உடல் நலக்குறைவால் மரணம். நடிகர் பிரபு கனகா நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர். நடிகர் அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2,…

மேலும்...