Mamta-Banerjee

உத்திர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதியுடன் கரம் கோர்க்கும் மம்தா!

லக்னோ (19 ஜன 2022): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சமஜ்வாதிக்கு ஆதரவாக ஈடுபடவுள்ளார். அகிலேஷ் யாவுடன் கரம் கோர்க்கும் மம்தா பானர்ஜி, லக்னோவில் அகிலேஷ் யாதவின் தேர்தல் பேரணியில் கலந்து கொள்கிறார். தனது கட்சி பிரச்சாரத்திற்கு மம்தாவை எஸ்பி துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா நேரில் அழைத்திருந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் பேரணியின்போது மம்தா பானர்ஜி ஆன்லைனில் பேசுவார். அதேபோல, வாரணாசியில் நடைபெறும் பேரணியில் அகிலேஷுடன் மம்தாவும்…

மேலும்...

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் படுதோல்வி!

கொல்கத்தா (22 டிச 2021): மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 144 வார்டுகளில் 134 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 10 வார்டுகளில் பாரதிய ஜனதா 3, காங்கிரஸ் 2, இடதுசாரிகள் 2 மற்றும் சுயேச்சைகள் 3 பேர் வெற்றிமுகத்தில் இருந்தனர். இப்படியாக தனது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒற்றை இலக்கத்தில் நிற்கவைத்து, மூன்றிலக்க எண்ணில் முன்னணி வகித்து வெற்றி பெற்றுள்ளார்…

மேலும்...

மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் மம்தா – காங்கிரஸ் மீது சாடல்!

புதுடெல்லி (02 டிச 2021): காங்கிரஸ் தவிர மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ளார். மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூரில் அமோக வெற்றி பெற்ற பிறகு, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை அமைப்பதுதான் மம்தா பானர்ஜியின் நடவடிக்கை. ஆனால் தற்போது UPA மாற்றுக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை மம்தா எடுத்துள்ளார். நேற்று முன் தினம் மகாராஷ்டிரா வந்தடைந்த மம்தா பானர்ஜி, இன்று சரத் பவாரை…

மேலும்...
Mamta-Banerjee

மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அபார வெற்றி!

கொல்கத்தா (03 அக் 2021): மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். தேர்தல் கமி‌ஷன் விதிகள்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவிகளில் இல்லாதவர்களும் முதல்வராக அல்லது அமைச்சராக பதவி ஏற்கலாம். ஆனால்…

மேலும்...
Mamta-Banerjee

தேர்தல் தில்லுமுல்லு வழக்கில் மம்தாவை எதிர்த்து வெற்றி பெற்றவருக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

கொல்கத்தா (14 ஜூலை 2021): தேர்தல் தில்லுமுல்லு வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சியில் அதிகாரமிக்க அமைச்சராகவும், மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சுவேந்து ஆதிகாரி 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இணைந்தவுடன் தேர்தலில் தன்னை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என்று மம்தாவுக்கு சவால்…

மேலும்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி – திமுக பங்கேற்பதாக தகவல்!

புதுடெல்லி (22 ஜூன் 2021): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த 15 கட்சிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இதில் திமுக பங்கேற்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இருமுறை சந்தித்து விதித்துள்ளனர். இதில் நேற்றைய சந்திப்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை பிரதமர்…

மேலும்...
Mamta-Banerjee

மம்தா தோற்றது செல்லாது -அத்தனையும் தில்லுமுள்ளு – நீதிமன்றத்தில் வழக்கு!

கொல்கத்தா (18 ஜுன் 2021): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது மோசடி என்று முதல்வர் மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் மார்ச் – ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்….

மேலும்...

பலரது உயிர் போக மோடிதான் கரணம் – மம்தா கடும் விமர்சனம்!

கொல்கத்தா (08 ஜூன் 2021): “கோவிட் தடுப்பூசியை பிரதமர் மோடி இலவசமாக கொடுக்காததால் பலரது உயிர் பறி போனது” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என அறிவித்திருந்தார். பிரதமரின் அறிவிப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி’ “அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பிப்ரவரி மாதம் முதல் பலமுறை…

மேலும்...

மோடி படத்தை தூக்கிவிட்டு மம்தா பானர்ஜியின் படம் – பரபரப்பில் ஒன்றிய அரசு!

கொல்கத்தா (05 ஜூன் 2021): மேற்குவங்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வோருக்கு சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தூக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் விநியோகிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில அரசு சார்பில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் பதித்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெற்றுள்ளதற்கு தொடக்கத்தில் இருந்தே மேற்குவங்க மாநில முதல் வர் மம்தா பானர்ஜி…

மேலும்...
Mamta-Banerjee

மத்திய அரசின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் மம்தா பானர்ஜி!

கொல்கத்தா (31 மே 2021): மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில், அவரை பணியில் இருந்து விடுவிக்க முடியாது என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரதமர் மோடி உடனான ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாமாக கலந்துக்கொண்டார். சில நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த மம்தா, பிரதமரிடம் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை…

மேலும்...