விவேக் மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார்!

சென்னை (17 ஏப் 2021) நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசியே காரணம் என வதந்தி பரப்புவதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே விவேக் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது….

மேலும்...

பாரசிடமால் கொடுப்பதற்கு லாக்டவுன் எதற்கு? – மன்சூர் அலிகான் கேள்வி!

சென்னை (01 மே 2020): “கொரோனா என்று பாரசிடமால் கொடுத்து கொஞ்சநாள் வைத்திருந்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்; இதற்கு எதற்கு லாக்டவுன்?” என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று…

மேலும்...

இதைவிடவா எழுச்சி வேண்டும்? -ரஜினிக்கு மன்சூர் அலிகான் கேள்வி!

சென்னை (14 மார்ச் 2020): தமிழகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் எழுச்சி போதாதா? என்று நடிகர் மன்சூர் அலிகான் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த தனது நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது எழுச்சி ஏற்பட்டால் அரசியல் கட்சி தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடிகர் மன்சூர்அலிகான் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் போராடியது எழுச்சியாகத் தெரியவில்லையா? மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து…

மேலும்...