சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் மாப்பிள்ளை மட்டும் வரவில்லை. மேலும் மணமகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அடுத்த நாள்தான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். ஆனால் அவரை கணவராக ஏற்க மணப்பெண் தயாராக இல்லை ​. முழு முட்டாளாகவும், தன் சொந்தப் பொறுப்புகளை…

மேலும்...

திருமண விருந்தில் கறி கிடைக்காததால் ரணகளமான திருமண நிகழ்ச்சி – வீடியோ!

பாக்பத் (14 பிப் 2023): கல்யாண வீட்டில் எப்போது எதற்காக சண்டை வரும் என்று சொல்ல முடியாது. பப்படம் தீர்ந்து போவது, கோழியின் லெக் பீஸ் கிடைக்கவில்லை என பிரச்சனை செய்வது, பிடித்தமான பாடல் ஒலிக்காமல் இருப்பது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளால் சண்டைகள் வரும். இப்படித்தான் உத்திரபிரதேச மாநிலம் பாக்பத்தில் ஒரு சின்ன காரணத்தால் கல்யாண வீடு ரணகளமாகியுள்ளது. திருமண பந்தலில் திருமண விருந்து பரிமாறப்பட்டபோது மணமகன் மாமாவுக்கு கறி கிடைக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த…

மேலும்...

முஸ்லீம்களுக்கு விழிப்புணர்வு – ஆர்எஸ்எஸ் முஸ்லீம் பிரிவு தகவல்!

புதுடெல்லி (07 மார்ச் 2022): முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தப்போவதாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்ஆர்எம்) தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் குழந்தை திருமண தடை (திருத்த) மசோதா 2021ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா…

மேலும்...

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சட்டம்!

கேப்டவுன் (29 ஜூன் 2021): தென் ஆப்ரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டப்பூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது தென்னாப்பிரிக்காவில் திருமண விவகாரத்தில் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று திருமணம் சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, புதிய சட்டத்தினை அமல்படுத்த பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக பல்வேறு தரப்பின் கருத்தை கேட்டுள்ளது…

மேலும்...

திருமண வீட்டில் முதல்வர் ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!

சென்னை (27 ஜூன் 2021): இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று நடைபெற்றது. ரஞ்சி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஐஸ்வர்யாவை மணந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் படி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இயக்குனர் ஷங்கர் அழைப்பு விடுத்ததின் பேரில், முதல்வர் முக ஸ்டாலினும் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

மேலும்...

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது வன்புணர்வு குற்றமல்ல – டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி (17 டிச 2020): திருமண நிச்சயதார்த்தம் முடிவுற்ற நிலையில், திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது வன்புணர்வு குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீண்ட கால ஒருமித்த உடலுறவுக்குப் பிறகு துன்புறுத்தல் புகார் அளிப்பது அனுமதிக்கப்படாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் மீதான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு இந்த உத்தரவினை அளித்துள்ளார். மேலும் இதுகுறித்த உத்தரவில், பல மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து, தொடர்ந்து…

மேலும்...

மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதால் ஆவேசமடைந்த புதுமணப் பெண் – தடை பட்ட திருமணம்!

லக்னோ (15 டிச 2020): மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை நடன மாட இழுத்துச் சென்றதால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. உத்திர பிரதேசம் பரேலியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணை மணமகனின் நண்பர்கள் நடனமாட இழுத்துச் சென்றன. இதனால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் அவரது வீட்டுக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தார். மணமகளை சமாதானம் செய்ய இரு தரப்பினரும் முயன்றனர். எனினும் மணமகள் செவிசாய்க்கவில்லை. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக…

மேலும்...

பிளஸ் டூ மாணவர்கள் வகுப்பறையில் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு!

ராஜமுந்திரி (05 டிச 2020): ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிளஸ் டூ வகுப்பறையில் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன், மாணவியின் கழுத்தில் தாலி காட்டினார்.. மற்றொரு நண்பர் அதை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் நவம்பர் தொடக்கத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பின்பே இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. ‘அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியது யார் என்பது…

மேலும்...

முகக்கவசம் இல்லை, சமூக இடைவெளி இல்லை – ஆயிரக்கணக்கானோர் புடைசூழ நடந்த அமைச்சர் வீட்டு திருமணம்!

கோவை (12 ஜூன் 2020): கொரோனா விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ அமைச்சர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமணம் அமர்க்களமாக அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்தவர் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஜெயபிரனிதா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யன் ஆகியோருக்கு, கோலார்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. கொரோனா விதிமுறைகளைப் பற்றி கவலைப் படாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். அரசுத்துறை அதிகாரிகள்,…

மேலும்...

திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொண்டால் பலாத்காரமல்ல – நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

கட்டாக் (25 மே 2020): திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல என்று ஒடிசா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம், கோரபுத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் இளம் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருகும் காதல் மலர்ந்துள்ளது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்பு அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ்…

மேலும்...